The side that is not spoken about, generally.

அனேகமாகப் பிரச்னைகளே இல்லாத நாடாக மாறி விட்டோம்.

வறுமை, கல்வி இன்மை, வேலை இல்லாத் திண்டாட்டம், அனைவருக்கும் கல்வி, பெண் சிசுக்கொலை, தீண்டாமை, சாதி அரசியல் என்று எந்தப் பிற்போக்கு அம்சங்களும் இல்லாத ஒரு சம தர்ம சமூகமாக மாறி விட்டோம்.

ஆகவே, ‘Consent Age’ பற்றிக் கவலைப்படுகிறோம். ‘Consent Age’ என்றால் ‘உடல் ரீதியான உறவுக்கான வயது’ என்று கொள்ளலாம். இணக்க வயது என்பது சரியாக இருக்குமோ ?

‘Consent Age’ குறைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொல்கிறது.

பெண்கள் 18 வயதுக்குப் பிறகு தான் Consent சாத்தியம் என்று POSCO சட்டம் சொல்கிறது. அந்தச் சட்டத்தில் அதற்கான வயதை 16ல் இருந்து 18 ஆக உயர்த்தியுள்ளார்கள். இது தவறு என்கிறது உச்ச நீதி மன்றம். ஏனெனில், POSCO சட்ட வழக்குகளில், பையனுக்கும் பெண்ணுக்கும் காதல் என்று தெரிவதால் வழக்குகள் தள்ளுபடியாகின்றன என்கிறது நீதி மன்றம்.

இது உண்மைதான்.

ஆனால், கிராமப்புறங்களில் ஆண் ஆதிக்க சமூகப் பழக்கங்கள் இன்னமும் நிலவும் சூழல்களில், இணக்க வயது வராத பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை தானே ? அந்தக் குழந்தைகளை அரசு + நீதிமன்றம் பாதுகாக்க வேண்டாமா ? அவர்களுக்கான வரப்பிரசாதமாக POSCO சட்டம் உள்ளது.

நகர்ப்புறப் பள்ளிகளில் கூட பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லைகள் நடைபெறுகின்றன. அவற்றில் இருந்தும் ஒரு பாதுகாப்பாகவே இந்தச் சட்டம் உள்ளது.

இணக்க வயதை 16ஆகக் குறைத்தால், குற்றம் இழைப்போருக்கு இது ஒரு பெரும் வசதியாகப் போய்விடும். தவறையும் செய்துவிட்டு, குழந்தைகளை மிரட்டி, ‘இணக்கத்தோடுதான் உடன்பட்டேன்’ என்று சொல்லச் செய்வது சுலபம்.

எனவே, இந்தப் போலி முற்போக்குப் பாசாங்குகள் எதுவும் இல்லாமல், இந்தச் சட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் கடுமையாக அமல் படுத்தப் பட வேண்டும்.

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நாம் மிகவும் ‘முன்னேறிய’ சமூகமாக நம்மைப் பாவித்துக்கொள்ளப் போகிறோம் ? இந்த முற்போக்கு போன்ற போலி பாவனை ன் சமூக அசிங்கம் போல வேறொன்று இல்லை.

போலி முற்போக்கு முகமூடிகளைக் கழற்றி வைப்போமா?

–ஆமருவி
25-12-2022

2 responses

  1. MAHADEVAN NATARAJAN Avatar
    MAHADEVAN NATARAJAN

    The courts and milords are hand in glove collusion with accused who often happen to be powerful persons and the victims are normally poor.
    May God save our children from these monsters. Police station is another place where they execute whatever was left to be done by the accused.
    The quality of lawyers and advocates can be gauges by the standard of institutions like JNU etc
    May God save this holy nation

    We can just pray
    You brought an apt point Mr Aamaruvi

    Like

    1. Amaruvi's Aphorisms Avatar

      <

      div dir=”ltr”>Thank you sir. We need to keep

      Like

Leave a comment