The side that is not spoken about, generally.

2016ம் ஆண்டு சிங்கப்பூரில் எழுத்தாளர் ஜெயமோகன் நடத்திய காவிய முகாமில் இந்த நூலுக்கான விதை போடப்பட்டது.

அப்போது ‘நான் இராமானுசன்’ நூல் வெளிவந்த நேரம். அதைப் பற்றிப் பேசும் போது ஜெயமோகன் சொன்னது “சமூகங்களுக்கான இடப்பெயர்வுகள் சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. சமூகங்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும். உதாரணமாக, நீங்க பிராமணர்கள் இடப்பெயர்வு பத்தி யோசிக்கலாம். அவரவர்கள் தங்கள் குடும்பம், சமூகம் பற்றி கொஞ்சம் விசாரிச்சு, முன்னோர்கள் இருந்த இடங்களுக்குப் போய்ப் பார்த்து எழுதினாலே சமூக வரலாறு கிடைச்சுடும். வரலாற்றுல ஆவணமா இருக்கும்’ என்றார்.

அந்த விதை, 7 ஆண்டுகள் வளர்ந்து தற்போது ‘வந்தவர்கள்’ என்கிற பெயரில் நாவலாக வந்துள்ளது. இதற்காக நான் பலரிடம் பேசி, சில ஊர்களுக்குச் சென்று முனைந்து எழுதினேன். தாது வருஷப் பஞ்சம், பின்னர் 1940 களில் நடந்த பஞ்சங்கள், இதனால் ஏற்பட்ட பிராமணர்களின் இடப்பெயர்வுகள் என்பதை அடிப்படையாக வைத்து எழுதிக்கொண்டிருந்தேன். தற்போது நூலாக வந்துள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் அறிமுகம் செய்தார். முதல் பிரதியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் சுமதி அவர்கள் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ‘வாசிப்போம் தமிழிலக்கியம்’ குழுவின் நிறுவனர் திரு. மந்திரமூர்த்தி அழகு அவர்கள் பெற்றுக்கொண்டார். சுவாசம் பதிப்பகம் வெளியிடு. அட்டைப்படம் ஜீவா.

நூல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. நூல் பிரதி வேண்டுவோர் கீழ்க்கண்ட வகைகளில் பெறலாம்.

ஆன்லைன் மூலம் பெற இங்கே சொடக்கவும்.

தொலைபேசியில் அழைத்து ஆர்டர் செய்ய +91-81480-66645 அழைக்கலாம். வாட்ஸப் வழியும் உண்டு.

நூலை வாங்கி, வாசித்துக் கருத்துரையுங்கள்.

Leave a comment