வந்தவர்கள் – ஓர் வாசிப்பனுபவம்

இயற்பியல் பேராசிரியர் முனைவர் உத்ரா துரைராஜன் அவர்கள் ‘வந்தவர்கள்’ நாவல் பற்றித் தனது வாசிப்பு அனுபவத்தை இரண்டு பதிவுகளாகப் பதிவுசெய்துள்ளார். தனது நேரத்தைச் செலவழித்து வாசித்து, தனது வாசிப்பு அனுபவத்தை எழுதிய பேராசிரியருக்கு நன்றி.

https://www.facebook.com/share/p/aB9pmSMqjtXHY4qe/?mibextid=xfxF2i

“வந்தவர்கள்” – புத்தக வாசிப்பு அனுபவம் – book review 1/2

If you are from Chengalpattu,villivalam, Navalpakkam, Siruthaamoor, Madhuranthakam or anywhere near Kanchipuram and /or belong to Iyengar clan, you want to know how difficult things went in 1900s, challenges they had to face even to eat, why your parents were so strict about your focus on your education (rather marks), how many from middle or lower middle class had to struggle, you seek closure for many scenes unfolded in your family, please buy and READ the novel Vandhavargal, by ஆ பக்கங்கள். Swasam Publications

A small review here in Tamil

(Disclaimer : நாவலைப் படிக்காமல், இங்கு எழுதப் பட்டுள்ளதை தங்கள் கற்பனையில் பெரிதாக்கி யாரும் தயவு செய்து இங்கு பூட்டை ஆட்ட வேண்டாம்)

1. வட தமிழக ஐயங்கார் என்பது களம், அவ்வளவே!

வானம் பார்த்த நம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி, திண்டிவனம் மக்கள் யாரும் இதோடு ஒன்ற முடியும். இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம் வீட்டின் யாராவது ஒருவரை / பலரை ( மாமா, அத்தை, பெரிப்ப, சித்தப்பா…) அப்படியே பிரதி பலிக்கிறது. யார் படித்தாலும் நெஞ்சம் உருகும் ( கையில் kerchief இருப்பது நல்லது. )

2. புத்தகத்தை எடுத்த பின் வைக்க முடியாது. சமையல்/ அவசர ஜோலியை முடித்தபின் படிக்கவும். ஆசிரியர் ஆமருவி விட்டாலும் ஜானகியும், சுதர்சனமும் ராமஞ்சுவும் ராகவனும் நம்மை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள். பூசாரி கதைக்குள் வந்தபின் புத்தகத்தை கீழே வைக்க வாய்ப்பே கிடையாது.

3. ஐயங்கார் குடும்பங்களில் பிறந்துள்ள ஒவ்வொருவரும் அவசியம், நம் மூதாதையர்கள் பட்ட பாடு என்னவென்று நம் பிள்ளைகளுக்குச் சொல்ல, நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள, “வந்தவர்கள் ” அனுபவம் உதவும்.

4.”How to explain this gen Z about our ancestory or heritage, when even we don’t know much. I lost touch with my ancestors long back…they did not tell us anything. Sadly, we don’t maintain any records” என்று குறைபடாமல் இருக்க, நீங்கள் படிக்க வேண்டியது “வந்தவர்கள்”. Coz , author has searched so many documents and made that job easy for you. Hats off to him for this humongous effort. Not easy sir, thank you.

5. வீழ்வேன் என நினைத்தாயோனு சுதர்சனம் முழு நாவல்லயும் நமக்கு நின்னு காமிக்கிறார். எத்தனை வறுமைலயும், ஒரு இடத்துலயும் அழுமூஞ்சித்தனம் கிடையாது. ஏழை , ஏழ்மைன்னா ஆகாத்தியம், அழுகைனு narrative set பண்ற

சினிமாக்காரன் கத்துக்கனும்

– no way. சாப்பாட்டுக்கு, குழந்தை பாலுக்கு சிரமம், ஆனாலும் மெல்லிய உணர்வுகளை புரிந்து கொள்ளும் அழகான Romance, ஜனகிக்கும் சுதர்சனத்துக்கும் இடையே உள்ள

ஒத்திசைவு – அழகு, மெச்சிகனும் . அதுதான் அடுத்த தலை முறைய காப்பாத்த உதவரது.

6. நார்மடியோட வலி, பாதுகாப்புக்காக தானா அந்த வலிய சுமக்க வேண்டிய கட்டாயம், அதுக்காக யாரையும் அவ தூத்தல, அழல, Finger point பண்ணி பயன் இல்ல, அத accept பண்ணிடுட்டா… ஜானகி stands TALL. லட்சுமி மாமி, அந்த பாட்டி – சுதந்திரத்துக்காக , நாட்டுக்காக ஆயுதம் ஏந்திய ஆண்கள் காணாமல் போன குடும்பம்…இவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம். வீரமங்கறது தைரியமா ( பயம் இருந்தாலும்) சவால்களை சந்திக்கிறது தான், “பெருமாள் மேலே பாரத்தை போட்டுட்டு உன் வேலைய பண்ணு” positivity, focus at work, belief, trust – இந்தப் பெண்கள் வாழ்ந்து காட்டியவர்கள்.

https://www.facebook.com/share/p/QZ8pjoxmzeejdVEj/?mibextid=xfxF2i

வந்தவர்கள் – நாவல் – ஆ பக்கங்கள் , Haran PrasannaSwasam Publications எண்ண ஊற்று – 2/2

ஒரு தாயாக ஆசிரியையாக நான் இந்த நாவலில் பெற்றது, பிறருக்கு பகிரப் போவது …

1. “இப்ப இருக்கிற ஸ்திதியில.. ஆனா, அதுக்காக இது இப்படியேதான் இருக்க போறதுன்னு நினைச்சுண்டு உக்காண்டு இருந்தோம்னா இன்னும் கீழேதான் போகணும். இப்ப இதுக்கு மேல கீழ போறதுக்கு வழி இல்ல”

2. “நம்மால முடியற அளவைவிட ஒரு படி மேலே ஏற பாக்கணும். அப்பதான் இருக்கிற இடத்துலயாவது நிக்க முடியும் “

3. “அம்மா ரொம்பவே முன்னாடி யோஜிக்கிறா இவ மட்டும் நாலு எழுத்து வாசிச்சிருந்தா…” – அழகு

4.”காலம்தான் மாறுகிறது. சாரம் ஒன்றுதான். ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைப் பாதையை கடந்து செல்லும் வழியில் உள்ள பல ஆபத்துகளில் ஒன்று கணவன் திடீரென மரணிப்பது. அதிலும் கட்டுப்பட்டியான பிராமண பெண்கள் அல்லல்படுவது இம்மாதிரியான நிகழ்வுகளில் வீழ்ந்த பிறகுதான். கல்யாணம் என்கிற பந்தத்தில் இருந்து ஒரே வெட்டாக வெட்டி அன்னியப்படுத்தி விடுகிறது…

…என்ன கொடுமையானாலும் எந்த தருணத்திலும் தங்கள் சுயத்தை இழக்காமல் அப்பளம் விற்று சாணி தட்டி விறட்டி விற்று, பால் கறந்து விற்று ஒரு மாதிரியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டே செல்கின்றனர். ஒரே வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. காலமும் இடமும் தான் வேறு. வாழ்க்கை இவ்வளவுதானா? ஒரே அவலம் மீண்டும் மீண்டும் பலருக்கு நிகழ்வது தான் வாழ்க்கையா ?

இந்த நிலை பிராமணப் பெண்களுக்கு மட்டும் தானா? மற்ற ஜாதிகளில் எப்படி உள்ளது? அந்தப் பெண்களின் நிலை என்ன? அவர்கள் நிலைமையை எப்படி சமாளிக்கிறார்கள்?..” –

மிக ஆழமான வரிகள். காயத்தின் வலி நம்மையும் தாக்குகிறது.

நிலை ஓரளவு மாறியுள்ளது என்றாலும், பழைய வழிகளை பிடித்துக் கொண்டு தொங்கும் மக்களும் இருக்கிறார்கள். ஜனத்தொகை பெரிதாக இருக்கும் நம் நாட்டில் எல்லாருக்கும் விடிவு எந்நாளோ? ஊறுகா அப்பளத்தையும் சாணத்தையும் கேலி பேசும் முன் அது யாருக்கோ கஞ்சி ஊத்துகிறது எனும் எண்ணம் வந்தால் சமூகம் உருப்படும்.

5. ‘லட்சுமி மாமி கிட்ட இத போய் சொல்லாதேயும். அவ மனசுல அவ ஆத்துக்காரர் வாழ்ந்து கொண்டே இருக்கட்டும். அவர் இருக்கிறதாகவே மாமி நினைச்சுண்டு இருக்கட்டும். நீ அவளோட கற்பனையை கெடுக்காதே ” – கண்ணில் குளம்….

6.”நீலகண்ட பிரம்மச்சாரி என்று ஒருத்தன் அடிக்கடி வருவான். வாசல்லயே நிப்பான். அவன பார்த்த உடனே இவர் கிளம்பிடுவார், எங்க போறார் என்ன பண்றார் எப்ப வருவார் ஒன்னும் தெரியாம நாங்கல்லாம் இருப்போம் ….

….பையன் இங்கிலீஷ் படிப்பும் படிச்சிருந்தார்.. கல்யாணம் பண்ணினோம். அப்புறம்தான் தெரிஞ்சது மாமனாரும் மாப்பிள்ளையும் சுதேசிகளாம். பையனுக்கு வெடிகுண்டு அது இதுன்னு பண்ண தெரியுமாம். மாமனார் மாப்பிள்ளை ரெண்டு பேரையும் தேடிண்டு போலீஸ்ல இருந்து வர ஆரம்பிச்சா….”

“அது ஒரு ஆஹுதி மாதிரின்னு சொன்னான் வள்ளுவன். தேசம்ங்கற யாகத்துக்கு எங்காத்துலேர்ந்து மூணு தலைமுறைக்கு ஆஹுதி கொடுக்கணும்னு விதி…”

– இப்படிப் பெற்ற சுதந்திரம்…வந்தே மாதரம். அவசியம் புத்தகத்தை படியுங்கள்.

7.”எங்க ஆத்துக்காரர தேசத்துக்கான ஹவிர்பாகமா கொடுத்துட்டேன். ஹவிசுக்கு பலன் குடுன்னு கேட்க மாட்டேன் அம்மா ரொம்ப நாளைக்கு முன்னாடியே சொல்லிட்டா…” தியாக பென்ஷன் வேண்டாம் எனச் சொன்ன செல்லம்மா பாட்டி…

8.” அடடா…. நான் பார்த்துக்கறேன். நீங்க விசனப்படாதீங்கோ. நான் கொஞ்ச நாள் இங்க இருந்து, கஸ்தூரிக்கு நம்மாத்துப் பழக்கமெல்லாம் சொல்லிக் கொடுத்து எங்காத்து பொண்ணா ஆக்கிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்கோ ஸ்வாமி” – அஹா..என்ன ஒரு வாத்சல்யம் …இது இருந்தா போதுமே…ஜானகி மாமி மாறி 100 பேர் இருந்தா அத்தனை பொண்களுக்கும் போதும்…

9. ஐயங்கார் பாஷை, அதுவும் இந்த காஞ்சிவரம் பக்கத்து slang, swear words, கிண்டல் கேலி, கொஞ்சம் வம்பு – என்னோட தாத்தாவும் பழைய காலத்து மனுஷாலும் வந்து போனா… nostalgia

10. மிக கனமான விஷயத்தை , சவாலான ஒன்றை அழுகை, over reaction இல்லாமல் அழுத்தமாக எழுதியுள்ள ஆமருவிக்கு நன்றிகள். Thanks to Publishers.

நூல் வாங்க : சுவாசம் பதிப்பகம் +91-81480-66645 அழைக்கவும்.

‘வந்தவர்கள்’ நாவல் – விமர்சனக் கூட்டம் -1

‘வந்தவர்கள்’ நாவலின் முதல் விமர்சனக் கூட்டம் இணைய வழியில் நேற்று (28-01-2024) நடைபெற்றது. அதன் ஒலிப்பதிவு கீழே. கேட்டுக் கருத்துரையுங்கள். நூல் வாங்க +91-8148066645 – Swasam Books – அழைக்கவும்.

‘வந்தவர்கள்’ – நூல் வெளியீடு

2016ம் ஆண்டு சிங்கப்பூரில் எழுத்தாளர் ஜெயமோகன் நடத்திய காவிய முகாமில் இந்த நூலுக்கான விதை போடப்பட்டது.

அப்போது ‘நான் இராமானுசன்’ நூல் வெளிவந்த நேரம். அதைப் பற்றிப் பேசும் போது ஜெயமோகன் சொன்னது “சமூகங்களுக்கான இடப்பெயர்வுகள் சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. சமூகங்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும். உதாரணமாக, நீங்க பிராமணர்கள் இடப்பெயர்வு பத்தி யோசிக்கலாம். அவரவர்கள் தங்கள் குடும்பம், சமூகம் பற்றி கொஞ்சம் விசாரிச்சு, முன்னோர்கள் இருந்த இடங்களுக்குப் போய்ப் பார்த்து எழுதினாலே சமூக வரலாறு கிடைச்சுடும். வரலாற்றுல ஆவணமா இருக்கும்’ என்றார்.

அந்த விதை, 7 ஆண்டுகள் வளர்ந்து தற்போது ‘வந்தவர்கள்’ என்கிற பெயரில் நாவலாக வந்துள்ளது. இதற்காக நான் பலரிடம் பேசி, சில ஊர்களுக்குச் சென்று முனைந்து எழுதினேன். தாது வருஷப் பஞ்சம், பின்னர் 1940 களில் நடந்த பஞ்சங்கள், இதனால் ஏற்பட்ட பிராமணர்களின் இடப்பெயர்வுகள் என்பதை அடிப்படையாக வைத்து எழுதிக்கொண்டிருந்தேன். தற்போது நூலாக வந்துள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் அறிமுகம் செய்தார். முதல் பிரதியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் சுமதி அவர்கள் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ‘வாசிப்போம் தமிழிலக்கியம்’ குழுவின் நிறுவனர் திரு. மந்திரமூர்த்தி அழகு அவர்கள் பெற்றுக்கொண்டார். சுவாசம் பதிப்பகம் வெளியிடு. அட்டைப்படம் ஜீவா.

நூல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. நூல் பிரதி வேண்டுவோர் கீழ்க்கண்ட வகைகளில் பெறலாம்.

ஆன்லைன் மூலம் பெற இங்கே சொடக்கவும்.

தொலைபேசியில் அழைத்து ஆர்டர் செய்ய +91-81480-66645 அழைக்கலாம். வாட்ஸப் வழியும் உண்டு.

நூலை வாங்கி, வாசித்துக் கருத்துரையுங்கள்.