நாமம் – பெருமாளோட பெயர்களைச்சொல்லி போட்டுக்கறது. திருமண் அப்பிடின்னு சொல்றது உண்டு.ஸ்ரீ ரங்கம் காவேரிக்கரை அருகே கிடைக்கும் ஒரு வகையான களி மண் என்று கேள்வி. ( தலைக்குள்ளே தான் களி மண் இருக்கே வெளிலேயும் எதுக்குன்னு பகுத்தறிவு பேசலாம். நல்ல POINT ).
ஐயங்கார் விபூதி இட்டுக்க மாட்டாங்க. சிவன் கோவிலுக்குப் போக மாட்டாங்க.பல பேர் விநாயகர் சதுர்த்தி கூட கொண்டாட மாட்டாங்க.
கறி ( காய் கறி ) – பொரியல் கிடையாது/- கறி அமுது தான்..
சமையல் கிடையாது.,ஆனா தளிகை பண்ணுவாங்க.தளிகை பண்ற உள் – அதாங்க தமிழ்லே KITCHEN னு சொல்லுவோமே அது தான். இப்போவெல்லாம் தளிப்பண்றஉள் அப்டின்னா ஏதோ TALIBAN மாதிரி இருக்குனு சொல்லிட்டு KITCHEN என்று தமிழ் வார்த்தை பயன்பாடு அதிகமா இருக்கு.
தளிகையை பெருமாளுக்கு அம்சே பண்ணுவாங்க.
மேலே சில புரியாத வார்த்தைகள் இருக்கில்லையா ? அத்தனையும் தமிழ் வார்த்தைகள். உதாரணமா :
சாத்துமுது – சாறு + அமுது. ( தக்காளி, புளி இதோட சாறுலேருந்து செய்யறதாலே சாற்று அமுது – ஆண்டவனுக்கு படைபதால் அமுது ஆகிறது.
அதுலேயும் படையல் கிடையாது. அம்சே பண்ணுறதுதான்.
அம்சே பண்றது – அமுது செய்யப் பண்ணுவது – இறைவனுக்கு உணவை அளிப்பது.
திருக்கண்ணமுது – திரு + கண்ணன் + அமுது. கண்ணபிரான் சாப்பிட்டதால் அது அமுது ஆனது.
கூட்டு – இது ஐயங்கார் அகத்துலே நெகிழ் கறி அமுது அப்பிடின்னு அழைப்பாங்க. இந்த ஒரு வார்த்தை இப்போ உபயோகத்தில் இல்லை.
ஆத்துக்குங்கற வார்த்தை ரொம்ப பிரபலம். தமிழ் லே அகம் – உள்ளே ( அக நானூறு, அகத்தின் அழகு .. ). அதுனாலே வீடு அகம் ஆனது.
அதே போலே அக்கார அடிசில், , புளியோதரை ,எள்ளோரை ( எள் சாதம்) – இப்படி பல.
வீட்டுக்கு வரும் பெரியவரை வரவேற்று ஏள்ளப்பண்ணுவார்கள். எழுந்தருளப்பண்ண வேண்டும் என்பதை எள்ளப்பண்ணனும் என்று இப்போது சொல்கிறார்கள்.
நீங்கள் என்று சொல்வது மரியாதைக் குறைவு அதனால் தேவள் ( தேவரீர்கள் ) என்று சொல்வார்கள்.
எப்பவும் நான் கிடையாது. அடியேன் தான். ( அடியேன் ராமானுஜ தாசன் …).
வைஷ்ணவ ஆழ்வார்கள் 12 பேர். இவர்களில் பிராமணரல்லாத ஆழ்வார்கள
பலர்.பெண் ஆழ்வாரும் உண்டு ( ஆண்டாள் ). அத்தனை ஆழ்வாருக்கும் கோவிலில் சந்நிதி உண்டு.ஒரு வகையில் ஒரு முற்போக்கான சமுதாயமாக இருந்திருக்கிறது. ராமானுஜர் தான் முதல் சீர்திருத்தவாதி என்பது மறைக்கப்படும் உண்மை ( வாழ்க பகுத்தறிவு ).
108 திவ்ய தேசம் ஐயங்கார்களுக்கு முக்கியம்.பெருமாள் கோவில்கள் 108 ஐ
ஆழ்வார்கள் பாடினார்கள். அவை திவ்ய தேசம் ஆயின.இமலயமலையில் பத்ரி மற்றும் நைமிசாரிண்யம் முதல் ஆந்திர மாநிலத்தில் அஹோபிலம் தொட்டு தமிழ் நாட்டில் பல கோவில்கள் சேர்த்து , கேரளா மாநிலம் வரையில் ஆழ்வார்கள் பாடின திவ்ய தேசங்கள்.
இப்போது 109 ஆவது திவ்ய தேசம் – அமெரிக்கா.
ஐயங்கார் குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐயங்கார் என்பதால் மட்டும் அவர்களுக்கு வேலையும் படிப்பும் மறுக்கப்படாததால் அமெரிக்காவில் இவர்கள் பெருமளவில் குடியேறிவிட்டனர். அதோடு கோவில்களும் உற்சவங்களும்.
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆழ்வார்கள் 4000 பாசுரங்கள்.அத்தனையும் தமிழ்.ஆழ்வார் பாசுரம் கொஞ்சமாவது தெரியாத ஐயங்கார் இருந்தால், வள்ளுவர் சொன்ன மாதிரி, “அவியினும் வாழினும் என் ?“. தினப்படி பாசுரம் சொல்லாம ஐயங்கார் இருந்தால் பேசாம அவன் மதம் மாறிடலாம்.அவ்வளவு தமிழ் + பக்தி கலந்த பாட்டுக்கள்.
ஆண்டாள் பாடின திருப்பாவை தெரியாத மனிதர்களை இந்த உலகம் சுமப்பதே தவறு என்று ஒரு தமிழ்ப் பாசுரம் :
“ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு ”
ஒருக்கால் அதுனாலே தான் அடிக்கடி EARTHQUAKE வந்து பூமி பல பேரை காவு வாங்குதோ ? என்னோட “பகுத்தறிவு”க்குப் புரியலே !
பின் குறிப்பு :
பகுத்தறிவாளர்கள் “ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்கார்சாமிக்கு மூணு கொம்பு ” என்று ஸ்ரீ ரங்கம் ரங்கநாதருடைய தென்கலை திருமண் பற்றி கண்டுபிடித்து நோபெல் பரிசு வாங்கினார்கள்.தென்கலை வடகலை பிரிவினை பற்றி பிறகு பேசுவோம்.
Leave a reply to Narayanan Raju Cancel reply