The side that is not spoken about, generally.

41வயது மணி கடலூர்க்காரர். 30வயது விக்ரம்- இருவரையும் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்திருக்க நியாயமில்லை.அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. இலங்கை விஷயமாக தங்களையே கொளுத்திக்கொண்டவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்ற வாலிபர் தானும் தீக்குளித்தார். இவர்கள் சாதித்தது என்ன ? இன்னும் சில ஆண்டுகளில் வெறும் புள்ளி விவரமாய்ப் போவார்கள் இவர்கள். இவர்களது குடும்பங்கள் என்ன செய்கின்றன ? இவர்களை நம்பி இருந்த தாய் தந்தையர் எப்படி இருக்கிறார்கள் ? அவர்கள் செய்த பாவம் என்ன? இப்படி மிகவும் உணர்ச்சி வசப்படுவதில் தமிழர்கள் முன்னணியில் நிற்பது ஏன் ?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி இன்று வெந்து தணிவதில் யாருக்கு என்ன லாபம்?
நம் கல்வி முறையில் தவறா? வளர்ப்பு சரி இல்லையா? சமூக முன் உதாரணங்கள் சரியானவர்கள் இல்லையா? அறிவு வளர்ச்சி அவ்வளவு தானா? எங்கோ தவறு நடக்கிறது.

One response

  1. Arul Avatar
    Arul

    நாட்டு/மொழி பற்று பிறப்பில் வருவது. நினைத்ததை அடைய உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.

    Like

Leave a reply to Arul Cancel reply