இடம் : ஒரு அரசுப் பள்ளி, மயிலாடுதுறை
நேரம்: காலை 9 மணி, ஞாயிற்றுக்கிழமை. ஒரு செப்டெம்பர் மாதம்.
மாணவர் கூட்டம் அலைமோதுகிறது. எல்லாம் ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை. பல பள்ளிகளிலிருந்து வந்திருந்தனர் என்பது அவர்கள் சீருடையில் தெரிந்தது.
மாணவர்கள் பெரும்பாலோர் பள்ளி எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று விட்டு வேகமாகப் பள்ளிக்குள் செல்கின்றனர்.
நெற்றியில் விபூதி, குங்குமம் இல்லாத மாணவர்கள் ரொம்பக் குறைவு. பெண்களும் அப்படியே.
ஓரிரு மாணவர்கள் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் ( ஒற்றை நாமம் ).
கையில் எல்லோரும் ஒரேமாதிரி புத்தகம் வைத்தபடி ஆழ்ந்து படித்துக்கொண்டிருகின்றனர்.
ஏதோ தேர்வு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எல்லா வயதினரும் ஒரே புத்தகத்தை வைத்துக்கொண்டிருந்தனர். கொஞ்சம் குழப்பமாக இருந்தது.
ஆர்வம் மேலிட ஒரு பையனிடம் விசாரித்தேன். தேர்வு நேரத்தில் குறுக்கீடு செய்ததால் முகத்தில் கோபம் தெரிய பதில் அளித்தான்.
“பாரத்தா தெரியல? இன்னிக்கி பரீட்சை ..”
“என்ன பரீட்சை தம்பி?”
மேலும் கீழும் பார்த்தான்., நெற்றியில் கனமான திருநீறு குங்குமம்.
“இதப் பாருங்க ..” புத்தகத்தின் அட்டையைக் காண்பித்தான்.
வெண் தாடியுடன் ஈ.வே.ரா. பெரியார் சிரித்துக்கொண்டிருந்தார்.
“இன்னிக்கி பெரியார் பற்றிய வினாடி வினா தேர்வு. அதுக்காக படிச்சிட்ரு க்கேன்.”
புத்தகத்தை உள்ளே பார்த்தேன்.”பெரியாரின் வாழ்க்கையில் நடநதவை” என்பது போல் தலைப்பு. எழுதியவர் கி.வீரமணி.
ஆவல் அதிகமாக சில கேள்விகளைப் பார்த்தேன். ஒன்று கண்ணில் பட்டது.
“பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் எதை முதலில் அடிக்க வேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார்?” என்ற கேள்வி. பிஞ்சு மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான கேள்வி. அந்தச் சிறுவனிடம் விடை தெரியுமா என்று கேட்டேன்.
“தெரியுங்க. பார்ப்பான் தான்” என்றான்.
“பார்ப்பான்னா என்னன்னு தெரியுமா தம்பி ?” என்றேன்.
“தெரியுங்க. பாம்பு வந்தவுடனே அதை அடிக்காம வேடிக்கை பார்ப்பவன்”, என்றான் வெகுளியாக. இந்தத் தேர்வு “பெரியார் கழகம்” என்னும் அமைப்பால் பெரியாரின் பிறந்தநாள் தொடர்பாக நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு உண்மைகள் எனக்கு விளங்கின.
1. பெரியார் பற்றிய தேர்வுக்கும் கடவுள் அருள் தேவைப்படுகிறது.
2. மாணவர்கள் களஙகமற்றவர்கள்.
முதல் பரிசு வாங்கும் மாணவன் நெற்றி நிறைய திருநீறு அணிந்து சென்று வாங்கினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தபடி நடந்தேன்.
பிஞ்சு நெஞ்சுகளில் நஞ்சு விதைக்கும் இந்த எச்சக்கலைகளை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.
LikeLike