தீபாவளி பஞ்சாங்கம் (எ) ஒரு போராளியின் டைரிக் குறிப்பு:
அக்-1: சுற்றுச் சூழல் கருத்தரங்கம்
அக்-2: ‘குழந்தைத் தொழிலாளர்கள்’ – கருத்தரங்கம்
அக்-3: ‘காற்று மாசடைதல்’ – குழந்தைகள் பேச்சுப் போட்டி
அக்-4: ‘காற்று மாசு – ஆஸ்துமா தொடர்பு’- நூல் வெளியீடு.
அக்-5: ‘தமிழர் பண்டிகைகள்’ – ஒரு பார்வை – நூல் வெளியீடு
அக்-6: நரகாசுரன் வாழ்வுரிமை மாநாடு
அக்-7: குழந்தை வெடிகள் – கவிதைத் தொகுப்பு வெளியீடு
அக்-8: சிறார் வேலைப் பொருளாதாரமும் சமூக நிதியும் – பேருரை
அக்-9: சிவகாசித் தொழிலாளர் பிரச்சினைகள் – அரைமணி அடையாள உண்ணாவிரதம்
அக்-10-13 – விடுமுறை. பேச்சு வார்த்தைகள், உறவாடல்கள்.
அக்-14: பட்டாசில்லா தீபாவளி – சிறுவர்கள் நிகழ்ச்சி
அக்-15: சிவகாசிப் பட்டாசுப் புறக்கணிப்பு மாநாடு
அக்-16: சிவகாசித் தொழிலதிபர்களுடன் சந்திப்பு
அக்-17: சீனப் பட்டாசு எதிர்ப்புப் போராட்டம்
அக்-17: தீபாவளி துக்க தினம் – கருத்தரங்கம்.
அக்-17: நரகாசுரன் அழிப்பு (எ) ஆரிய எதிர்ப்பு மாநாடு
அக்-17: ‘நான் ஏன் வாழ்த்துச் சொல்வதில்லை?’ கட்டுரை
அக்-18: தீபாவளி நாள். காலா வெளியீடு, டி.வி.யில் ‘சிறப்பு’ நிகழ்ச்சிகள்
அக்-19: நீட் எதிர்ப்பு மாநாடு
அக்-20: வடக்கு வாசல் போராட்டம்
அக்-20-டிச: 31: விடுமுறை. அமெரிக்க, மலேசியப் பயணங்கள். நிதி வசூல்
டிச 1- டிச: 20 : டிவி பார்த்து அதன்படி போராட்டங்கள்
…..
டிச-24: ‘மனித நேய வாழ்த்துக்கள்’ கட்டுரை
டிச-31: புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘ கட்டுரை
பி.கு.:
- வேலை இல்லா நாட்களில் ‘ஜி.எஸ்.டி.’ ‘பண-மதிப்பிழப்பு’ என்று பிழைக்க ஹிந்துவில் எழுதக் கேட்க வேண்டும்.
- ‘நவோதயா’ என்றால் என்னவென்று சர்ச் பார்க் கான்வெண்ட்ல் கேட்க வேண்டும். எதைச் சொல்லி எதிர்க்க வேண்டும் என்று இன்னும் தெரியவில்லை. எஸ்றா சற்குணத்திடம் கேட்க வேண்டும்.
- பொங்கல் வரை எப்படி சோறு பொங்குவது என்று வைகோவிடம் ஒருமுறை கேட்டு வைக்க வேண்டும்.