வேதத்தைப் படிக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்.
கீதையைப் படியுங்கள். அதுவும் முடியவில்லையா? ஒன்றும் கவலை வேண்டாம். திருப்பாவையைப் படியுங்கள். போதும். ஏனென்றால் #திருப்பாவை ‘பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதம் அனைத்திற்கும் வித்தாகும்’ என்பது வாக்கு
அதெப்படி திருப்பாவையை ‘வேதம் அனைத்திற்கும் வித்து’எனலாம்?’ மார்கழித் திங்கள்’எனத்துவங்கும் முதல் பாசுரத்தில் விடை உள்ளது.
‘நாராயணனே நமக்கே பறைதருவான் ..’என்கிறாள் ஆண்டாள்.
‘நாராயணன் பறைதருவான்’என்றில்லாமல் ‘நாராயணனே’என்று ‘ஏ’காரம் உள்ளதைக் கவனியுங்கள்.நாராயணன் ஒருவனே மோட்சம் அளிப்பான் என்பது பொருள்.
கீதையின் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’என்கிற வரிகள் இதனுடன் ஒத்திருக்கின்றன.கீதை,வேதத்தின் சாரம்.ஆக,கீதையில் கண்ணன் சொல்லும் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’என்பதை ஆண்டாள் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’என்பதன் மூலம் உணர்த்துகிறாள்.
இதெல்லாம் சரி. திருப்பாவை தெரியவில்லை என்றால் ?
அதற்கும் பதில் உள்ளது.
‘ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரைவையம் சுமப்பதுவும் வம்பு’என்பது முதலில் கண்ட செய்யுளின் முடிவு. திருப்பாவை தெரியாதவரை இவ்வுலகம் சுமப்பதே வீண் என்கிறார்கள்.
நாம் வீணானவர்களா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆக கூடியிருந்து திருப்பாவையைப் பாடுவோம் வாரீர்.