‘பக்தி இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சங்கப்பலகை நிகழ்வு 9 இன்று தேசிய நூலகத்தில் நடந்தேறியது. 40 பேர் வந்திருந்தனர். ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் முதலியோரைப் பற்றி திருமதி. மாதங்கி, திருமதி. மீனாட்சி சபாபதி, திருமதி. உஷா சுப்புசாமி பேசினர்.
கேட்டவர்களை மேலதிகத் தகவல்களைத் தேடிப் போக வைத்ததாக இருந்தன பேச்சுக்கள். அதற்கான தரவுகளையும் பேச்சாளர்கள் அளிக்கத் தவறவில்லை.
பயனுள்ள நிகழ்வாக அமைந்த மாலைப்பொழுது இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் என்று விரிந்து, தமிழ் என்னும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்தது.
வரவேற்பு – ஆமருவி
ஔவையார் உரை – திருமதி. மாதங்கி
காரைக்கால் அம்மையார் – திருமதி. மீனாட்சி சபாபதி
ஆண்டாள் – திருமதி.உஷா சுப்புசாமி
தங்களின் கடின உழைப்பிற்குப் பாராட்டும் நன்றியும்…
LikeLike
மிக்க நன்றி.
LikeLike