The side that is not spoken about, generally.

பதின்ம வயதை எட்டாத, விளிம்பு நிலையில் உள்ள பள்ளி மாணவர்களின் பார்வையில் சொல்லப்படும் கதைகளின் தொகுப்பே ராம் தங்கம் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதை நூல். பெயர்: திருக்கார்த்தியல்.
 
அலட்டல், அதிக வர்ணனைகள், பொய்மொழி இல்லாமல் சாதாரண நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களைக் கொண்டே மனதைப் பிழியும் கதைகள் பதினொன்றைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
 
அரசியல் சரி நிலை, மதச்சார்பற்றதாக காட்டிக் கொள்ளும் வெற்று வியாக்கியான வரிகள், அம்பேத்கார் மண் / பெரியார் மண், பொதுவுடமை ஒப்பாரிகள் என்று முற்போக்கு எழுத்தாளர்களால் கொண்டாடப் பட வேண்டியதற்குத் தேவையான எந்த லாகிரி வஸ்துக்களும் அற்ற, நேர்மையான, மனதில் ஆணியடிக்கும் கதைகள் உள்ளன.
 
இக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.
 
‘ஊழிற் பெருவலி’ என்னும் சிறுகதையைப் படித்த பிறது மனம் ஒரு நிலையில் இல்லை. ஓரிரு கதைகள் மனதில் நிற்கவில்லை.( பெரிய நாடார் வீடு).
 
நாஞ்சில் நாடனின் முன்னுரை சிறப்பு.
 
ஒரே மூச்சில் படித்தால் மனம் கனப்பது நிச்சயம். எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள். திருக்கார்த்தியல்

2 responses

  1. Venkat Desikan Avatar
    Venkat Desikan

    Mr Amaruvi  Where do I get the book from ? Please help me with publisher’s name, address and phone number. Regards Venkat Desikan Chennai 

    Sent from Yahoo Mail for iPhone

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      வம்சி புக்ஸ்

      Like

Leave a reply to Venkat Desikan Cancel reply