நீதி இன்னமும் சாகவில்லை

எந்த நீதிபதியும், அதுவும் தமிழகத்தில், இவ்வளவு தூரம் சொன்னதாக நினைவில் இல்லை.

விலை போன தமிழ் ஊடகம் வழக்கம் போல் தனது நபும்ஸகத் தன்மையைக் காட்டியுள்ளது..தனக்குக் காது கேட்காதது போல் நடித்து ஒரு முக்கிய நிகழ்வைக் கடந்து சென்றுள்ளது.
 
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திருமுருகன்(டேனியல்) காந்தியின் வழக்கு குறித்துச் சொல்லியுள்ள கருத்துக்கள் பெரிய அளவில் ஊடகத்தினரால் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமக்குத் தான் இதெல்லாம் தேவையில்லையே. நமக்குத் தேவை பரபரப்பு, கிரிக்கெட், புதிய சினிமா ரிலீஸ் பற்றிய செய்தி. தவிரவும் தேச துரோகத்துக்குத் துணை போதல் என்பதால் ஊடக வியாபாரிகள் வாய்களில் ஃபெவிகால் ஊற்றிக் கொண்டு வாளாவிருந்துவிட்டனர்.
 
நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார்?
 
1. FOE – Freedom of Expression – பேச்சுரிமை தேசத்திற்கு எதிராக இருத்தலாகாது. அதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் இடம் தரவில்லை.
 
2. டேனியல் காந்தியின் பேச்சுகள் சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை வளர்ப்பதாக உள்ளன.
 
3. குறிப்பிட்ட சமூகத்தைச் சாடியே பேசினால் ஒடுக்கப்பட்டவர்கள் உயர மாட்டார்கள்.
 
4. அவனது பேச்சு ஏதோ பாரத அரசும் அதன் நிறுவனங்களும் தமிழகத்தை வஞ்சிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளதைப் போன்று உள்ளது. இது தவறானது.
 
5. அவன் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையுமே கூட தவறாகவே பேசியுள்ளான்.
 
6. வெறுப்புப் பேச்சு கருத்துச் சுதந்திரம் ஆகாது.
 
7. இவன் யாருக்காக இவ்வாறு தூண்டி விட்டுப் பேசுகிறான் என்று விசாரணை செய்ய வேண்டும்.
 
மிக முக்கியமான கருத்துகள் இவை. எந்த நீதிபதியும், அதுவும் தமிழகத்தில், இவ்வளவு தூரம் சொன்னதாக நினைவில் இல்லை. ஜெயலலிதா வழக்கில் மறைந்த நீதிபதி ஶ்ரீநிவாசன் திருக்குறளைச் சுட்டி மிகக் கடுமையாகத் தீர்ப்பளித்தார். அவர் சொன்ன குறள்: ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு’ இந்த முறையில் ஜெயலலிதாவின் அரசு செயல்படவில்லை என்று அழுத்தமாகக் கூறினார் அவர். மறு நாள் அவர் வசித்து வந்த தி.நகர் சாலையில் கார்ப்பரேஷன் நீர் வரவில்லை என்பது வேறு விஷயம்.
 
அதற்குப் பிறகு மிகக் காட்டமான ஆணையாகவே நான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பைப் பார்க்கிறேன்.
 
பி.கு.: கருத்துரிமை ஒரு வரம்பிற்கு உட்பட்டதே. ( within reasonable limits) என்று அவ்வுரிமைக்குப் பூட்டு போட்டவர் பண்டித நேரு. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் (First amendment). நேரு செய்த நல்ல காரியம் அது.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

One thought on “நீதி இன்னமும் சாகவில்லை”

  1. பண்டித நேரு என்பதை தவிருங்கள். அவர் ஒரு இஸ்லாமியர்.பண்டிதரல்ல

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: