டிசம்பர் 29 கல்கி இதழின் ‘சர்வாதிகார ஜனநாயகம்’ என்னும் தலையங்கம் செக்யூலர் சட்டியில் கொதிக்கவிடப்பட்ட பகுத்தறிவுப் பொங்கல். எந்தவித நேர்மையும் இன்றி, கடைந்தெடுத்த அயோக்கியத் தனத்துடன் எழுதப்பட்டுள்ள, அடிப்படை நேர்மை, கடுகளவு ஆராய்ச்சி இல்லாத 5ம் வகுப்பு மாட்டுப் பொங்கல் கட்டுரை. எப்படிப்பட்ட பத்திரிக்கை, இன்று இப்படி.
இதையும் வலம் இதழின் கட்டுரைகளையும் ஒப்பிடவே முடியவில்லை. தலையங்கத்தில் ஒரு காத்திரம் வேண்டாமா? சரித்திரப் புரிதல் வேண்டாமா? முத்தலாக் ஏன் வந்தது, யார் வற்புறுத்தினார்கள் என்ற அடிப்படை அறிவு வேண்டாமா? 370 பற்றி நேரு கூறியது, அவர் அதை விலக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியது, பங்களாதேசிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்திரா காந்தி பேசியது என்று எதுவுமே தெரியாதா தலையங்கம் எழுதுபவர்களுக்கு?
கல்கிக்கு எழுத ஆளில்லையா? என்னே ஒரு வீழ்ச்சி! மன வருத்தமே மிஞ்சுகிறது.