பிராமணர்கள் செய்யும் சிராத்தம் (வருடாந்திர நீத்தார் கடன்) பற்றிய சில எண்ணங்கள்.
தற்காலத்திய சிராத்தம் இன்னமும் 10ம் நூற்றாண்டில் உள்ளது. ஸ்மார்த்தர்கள் செய்யும் சிராத்தம் பற்றி அடியேனுக்குத் தெரியாது. ஶ்ரீவைஷ்ணவர்கள் செய்வதைப் பற்றியே சொல்கிறேன்.
இத்தனை பக்ஷணங்கள் தேவையா? இத்தனை காய்கறிகள் தேவையா? அதிரசம், தேன்குழல், எள்ளுருண்டை, சில பச்சடி வகைகள், சீயன், திருக்கண்ணமுது, மனோஹரம், பல வகைகளில் கூட்டு வகைகள், துவையல், பல காய்கறிகள், சேப்பங்கிழங்கு, வாழைக்காய் என்று பட்டியல் நீள்கிறது.
தற்காலத்தில் நீரிழிவு அதிக அளவில் மிகப்பெரிய அபாயமாக உள்ள நிலையில், இவ்வளவு உணவு வகைகளால் சிராத்தம் நடந்த நாள் தவிர்த்து இரண்டு நாட்களுக்குப் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. உணவும் வீணாகிறது.
இதைப் போன்றே, மாதாந்திர அமாவாசைத் தர்ப்பணங்கள், கிரஹண கால தர்ப்பணங்கள் முதலியவற்றில் வயதான பெரியவர்களுக்கு என்று எளிய விதிகளையும் கொண்டு வர வேண்டும். நானறிந்த பல பெரியவர்கள் சம்பிரதாய வழக்கங்களை விடவும் முடியாமல், அனுஷ்டிக்கவும் சக்தியில்லாமல் அல்லல் படுகின்றனர்.
இவ்வாறு சொல்வது Soft Evangelisation, Neo RSS, Nehruvian Socialist Secular Dhimmi என்றெல்லாம் முத்திரை குத்திக் கடந்து செல்லாமல், அனைவரையும் சிந்திக்க வேண்டுகிறேன். மடாதிபதிகளும், சம்பிரதாயத் தலைவர்களும் இந்த மாற்றங்களைப் பற்றி விவாதிக்கத் துவங்க முன்வர வேண்டும்.
அந்தந்த சம்பிரதாயப் பெரியவர்கள் ஸதஸ் மாதிரியான ஒன்றை நடத்தி இவ்வழக்கங்களைக் காலத்திற்குத் தகுந்தவாறு மாற்ற முன்வர வேண்டுகிறேன். மாறாமலே இருக்க நமது சம்பிரதாயங்கள் மத்தியக் கிழக்கைச் சார்ந்தவை கிடையாது.
எளிமைப்படுத்தினால் இவற்றை விட்டவர்களும் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.
வாசக தோஷ: க்ஷந்தவ்ய:
Leave a reply to Ananda Ganesh Cancel reply