CAA சம்பாஷணை

‘அப்ப அந்தச் சட்டம் பத்தி உன்னோட கருத்துதான் என்ன? உனக்கு கருத்து, எண்ணம் இருக்கா, இல்லையா?’ #CAA

‘நாடே பத்தி எரியறச்சே, நீ ஶ்ரீரங்கம் போனா என்ன, பெருமாள் கோவில்ல கூட்டம் இருந்தா என்ன, அமைதியா சேவிக்கலைன்ன என்ன, கலை விஷயம் இருந்தா என்ன? என்னமோ பெரிய விஷயம் மாதிரி எழுதறயே? CAA பத்தி எழுதறதான? டெல்லி வயலன்ஸ் பத்தி எழுதறதான..’
 
‘ஸ்வாமி அதுக்கு நிறைய பேர் இருக்கா. ஃபேஸ்புக், பிளாக், ட்விட்டர் எதுலயும் விஷத்த வாரிக் கொட்டறா. இந்த மீடியம் எல்லாமே விஷவாயுக் கலன்களாவே இருக்கு. இதுலயே கடந்து உழல்ற மக்களும் விஷ வாயுவையே பிராணவாயுவா சுவாசிச்சுண்டிருக்கா. இதுல CAA வயலன்ஸ் மட்டுமே நாட்டுல நடக்கற மாதிரியே நடிக்க வேண்டியிருக்கு. ஆனா நாட்டுல பல விஷயங்களும் நடக்கறது. முன்ன நடந்தது எல்லாமே இப்பவும் நடந்துண்டே இருக்கு. அதுல என் அனுபவத்த எழுதினேன். உலகம் ஒண்ணும் மாறிடல்ல. எல்லாம் பழைய மாதிரியேதான் நடக்கறதுன்னு சொல்றேன். அவ்வளவுதான்.’
 
‘அது சரி. ஆனா, வன்முறை, கலவரம், சட்டம், அரசு நடவடிக்கை இப்படி எதையுமே கண்டுக்கலயே, என்ன எஸ்கேபிஸமா?’
 
‘ஸ்வாமி, எனக்குத் தெரிஞ்சதப் பத்தி மட்டுமே எழுதறேன். தெரியாததக் கத்துக்கறேன். இதுக்காக உலகத்துல நடக்கற எல்லாத்தப்பத்தியும் கருத்து சொல்லிண்டே இருக்கணும்னா எனக்கு 24 மணி நேரம் போறாது. வேலை இருக்கு, படிப்பு இருக்கு, பசங்களுக்கு வழிகாட்டறது இருக்கு, அனுஷ்டானங்கள் இருக்கு, குடும்ப வேலைகள், இப்படிப் பலதும் இருக்கு. வன்முறை பத்தி, போராட்டம் பத்தி நான் சொல்லல்லேன்னா போராட்டம் நிக்கப்போறதா? கட்சிகள் மைனாரிட்டி மக்களை முட்டாள்கள் மாதிரியே நடத்தறத மாத்திக்கப் போறாளா? இல்லை தூண்டி விடறத நிறுத்தப் போறாளா? இல்ல கோர்ட்டுதான் லிபரல் நாடகம் போடறத நிறுத்தப் போறதா? எதுவும் இல்ல. எரியற நெருப்புல என்னோட ஹவிஸ் வேண்டாம். அவ்ளோதான்.’
 
‘அப்ப அந்தச் சட்டம் பத்தி உன்னோட கருத்துதான் என்ன? உனக்கு கருத்து, எண்ணம் இருக்கா, இல்லையா?’
 
‘நான் அந்த சட்டத்தை முழுக்க படிச்சுட்டேன். இந்தியர்களுக்கு எதிரா ஒண்ணும் இல்லை.’
 
‘அப்ப நீ ஆதரிக்கற, இல்லையா? அப்படீன்ன அதைப்பத்தி எழுதலாமேன்னுதான் கேக்கறேன்’
 
‘சட்டம் படிச்ச பல பெரிய மனுஷாள்ளாம் சொல்லியாச்சு. நம்ம சிஎம். கூட இதுல அப்படி என்ன எதிரா இருக்குன்னு கேட்டிருக்கார். முழுக்க படிச்ச யாருக்கும் புரியும். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?’
 
‘அப்ப பழைய ஃபைனான்ஸ் மினிஸ்டர் எதிர்க்கறாரே, ஹிந்து எதிர்க்கறதே, இவாள்ளாம் பொய் சொல்றாளா?’
 
‘ஸ்வாமி, ஆள விடுங்கோ. நான் அந்த சட்டத்தைப் படிச்சுட்டேன்னு சொன்னேன். நீங்க வேற எதையோ கேட்டா நான் என்ன சொல்றது?’
 
‘அப்ப நீ என்னதான் சொல்ல வர?’
 
‘ஆபீசுக்கு நாழியாறதுன்னு சொல்ல வரேன். எங்கிட்ட பிளாக் மணி இல்ல, வேலைக்குப் போனாதான் சாப்பாடு, எனக்கு ஸ்பான்ஸர் பண்றதுக்கெல்லாம் ஆளில்ல. பொழப்பப் பார்க்கணும். இதத்தான் சொல்ல வரேன்.’
 
‘டொக்’. #CAA

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: