‘என்னங்க, இப்பிடி பண்ணிட்டீங்க. விருதை வாங்கிக்க மாட்டீங்களா?’
‘எங்களுக்கு குடுத்து தான் வழக்கம். வாங்கி பழக்கம் இல்ல’
‘அப்டி சொன்னா எப்டி? நீங்க வாங்கிக்கிட்டாதானே நாங்க குடுக்க முடியும்?’
‘என்னையா இது. எங்களுக்கு வேண்டாங்க. நீங்களே வெச்சுக்கோங்க’
‘இத்தனை நாள் வெச்சுக்கிட்டு இருந்தோம். இப்ப திருப்பி தறோம். தயவு செய்து வாங்கிக் கோங்க’
‘இத்தனை வருஷம் வெச்சுக்கிட்டு இப்ப திருப்பித் தரணும்னா எங்ககிட்ட ஏன் தர்றீங்க?’
‘உங்க பேரல் தான் நாங்களே எங்களுக்கே குடுத்துக்கிட்டோம். அதால நீங்க வாங்கிக்கணும்’
‘நாங்க வாங்கிக்க முடியாதே. நாங்க குடுக்கலியே’
‘அது உங்களுக்கும் எங்களுக்கும் தெரியும். ஆனா, வெளில சொல்லாதீங்க. நாங்க திருப்பித் தர்றோம். நீங்க சத்தமில்லாம வாங்கிக்கிடுங்க. நாங்களும் ‘திருப்பி தந்துட்டோம். வெற்றி, தன்மானத்தின் வெற்றி’ அப்படீன்னு செய்தி போட்டுடுவோம்’
‘நீங்க திருப்பி குடுத்தா நாங்க வாங்கிக்கறோம். ஆனா, அது நாங்க குடுத்ததா இருந்தா வாங்கிக்கலாம். இத முடியாது’
‘இப்ப பாருங்க. நீங்க குடுக்கல. ஆனா,நீங்க குடுத்ததா நாங்க சொல்லிக்கலையா? அதப்போலதான். நாங்க குடுத்துட்டோம்னு சொல்லிடுவோம். நீங்க ஆமாம்னு மட்டும் சொன்னா போதும். இதையே ‘தமிழினத்தின் வெற்றி, பஹுத்தறிவின் வெற்றி’ அப்டீன்னு கொண்டாடிடுவோம். பட்டிமன்றம் வெச்சுடுவோம். நரகாசுரன் திவசம் வருது. அன்னிக்கி உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையா ஒளிபரப்பிடுவோம். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க’
‘என்னையா ஒரே தொல்லையா போச்சு. எதாவது கோவில் பராமரிப்பு, அறிவுரைன்னா மேல பேசுங்க. இல்லேன்னா போன வெச்சுடுங்க. சும்மா தொண தொணன்னு..’
‘நீங்க அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது. தமிழ் இன மானம்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு இழுக்கு வந்துடும். எப்பிடியும் வாங்கிக்கிடுங்க. இல்லாட்டி கூட, ‘வாங்கிக்கொண்டோம்’நு செய்தியாவது வெளியிடுங்க. இதுக்கு மேல கெஞ்ச முடியாது.’
‘முடியாதுன்னா வேண்டாங்க. எதுக்கு கெஞ்சறீங்க?’
‘முடியாதுன்னா முடியாதுன்னு அர்த்தம் இல்ல. முடியல. வயசாயிடுச்சு இல்லியா..’
‘இதப் பாருங்க. எதாவது கோவில் கீவில் பராமரிப்பு அது இதுன்னா எங்க கிட்ட வாங்க..’
‘யோவ். யாருய்யா நீ? ஆரிய வந்தேறியா நீயி? கோவில் பராமரிப்பவது ஒண்ணாவது? கோவிலுக்கு முன்னால சிலை வெக்கணும்னா சொல்லுங்க. பராமரிப்பு எல்லாம் யாருகிட்ட பேசறீங்க. விருது பத்தி பேசலாம் வாங்க.’
‘ஒரு பேச்சுக்கு கேக்கறோம். நாங்க குடுக்காத விருத நீங்க எங்களுக்கு திருப்பி குடுக்கறதுக்கு என்ன காரணம்?’
‘ஒரு ஃபாசிஸ எதிர்ப்பு தான். மோதி அரசாங்கத்த எதிர்க்கணும். அயோத்தில கோவில் கட்டறாங்க. பத்திக்கிட்டு வருது. ஒண்ணும் பண்ண முடியல. ரொம்ப பேசினா மணியம்மை டிரஸ்ட ஆய்வு பண்றேன்னு வந்துடுவாங்க. ஆனா, எதாவது செஞ்சே ஆகணும். ஏன்னா, ரொம்ப நாளா சாப்டுட்டு, தூங்கி பொழுதே போகல’
‘அதுக்காக? அதுக்கும் விருதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘அட அரசியல் அரிச்சுவடி தெரியாம இருக்கீங்களே. சி.ஏ.ஏ. போராட்டம்னு மீட்டர் ஓடிச்சு. அதுக்கு முன்னாடி காவேரி தண்ணி வரல்ல. இப்ப பாழாப்போன தண்ணியும் வந்துடிச்சி. வெளில போய் போராடலாம்னா கொரோனாவா இருக்கு. அதால இப்பத்திக்கி விருத திரும்பி குடுத்து போராடறோம். கொஞ்சம் தயவு பண்ணுங்க’
‘சரி. ரொம்ப கேக்கறீங்க. இதுக்கு மேல கெஞ்ச வெக்கறது எங்களுக்கே என்னவோ போல இருக்கு. விருத யாருக்கு குடுத்தாங்களோ, அவரை விட்டு கொண்டு வந்து குடுக்கச் சொல்லுங்க. வாங்கி தொலைக்கறோம்’
‘என்னது? என்ன சொல்றீங்க? புரிஞ்சுதான் சொல்றீங்களா?’
‘ஆமாங்க. விருத வாங்கினவங்க தானே திருப்பிக் குடுக்கணும்?’
‘இப்ப புரியுது. நீங்க ஆர்.எஸ்.எஸ். சங்கி தானே? இப்ப சங்கிங்கள்ளாம் யுனெஸ்கோவுலயும் ஊடுறுவிட்டாங்களா? இதத்தான் தென்கிழக்காசிய சாக்ரடீஸ் அப்பவே சொன்னார்..’
‘என்ன சொன்னார்?’
‘கைபர், போலன் கணவாய் வழியா வந்துடுவாங்கன்னு’
‘இல்லியே. நாங்க டெல்டா ஏர்லைன்ஸ். நியூயார்க் டு டெல்லி’
‘அப்ப நீங்க வாங்கிக்கல்லேன்னா ‘விருதைத் திரும்பப் பெறாத யுனெஸ்கோவைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அரை மணி நேரம் இருக்க வேண்டி வரும். அதோட பின்விளைவுகள் கடுமையா இருக்கும். எச்சரிக்கறேன்’
‘ஐயா. மன்னிக்கணும். எங்களுக்கு வேற வேலை இருக்கு. போன வெக்கறீங்களா?’
‘இந்தக் கண்றாவிக்குத்தான் மாரிதாஸ், மதன்னு வீடியோ பார்க்காதீங்கன்னு தலையால அடிச்சுக்கறேன். தூக்கத்துல பெனாத்த வேண்டியது, எல்லார் தூக்கத்தையும் கெடுக்க வேண்டியது. என்ன விருதோ, கண்றாவியோ. காலைல ஒர்க் ஃப்ரம் ஹோம் இருக்கு நெனப்புல இருக்கா?’
துக்ளக் சத்யா நினைவுக்கு வருகிறார்! சிரித்து சிரித்து பல் சுளுக்கி விட்டது. அருமை.
LikeLike
மிக்க நன்றி. நண்பர்களுடன்
பகிர்ந்துகொள்ளுங்கள்.
LikeLike
Kishore missed sir!
LikeLike