புதிய திராவிடமாடல்

‘மோதி நம்மள ரொம்ப கொழப்பிட்டாரு தலைவரே..’

‘இப்ப என்ன புதுசா ?’ 

‘நமக்கு தென்னாசிய அரிஸ்டட்டிலும், பேரறிஞர் தம்பியும் கத்துக்குடுத்த சமூக நீதி அரிச்சுவடி பிரகாரம், நாம முர்முவுக்குத் தானே ஓட்டு போடணும் ? ஆனா, ஆதிக்க சாதிக்காரருக்கு ஓட்டுப் போட வெச்சு, அதுக்கப்புறமும் ‘சமூக நீதி காத்த நொண்ணை’, ‘திராவிட மாடல் சாம்பார்’நு நாம தொடர்ந்து கொழம்பறமாதிரி வெச்சுட்டாரு பாருங்க.. அதச் சொன்னேன்’

‘இதுல கொழம்ப என்ன இருக்கு? பிராமணர்கள ஒழிக்கணும்னு சொன்னபடியே ராஜாஜி கால்ல விழுந்து ஓட்டு வாங்கினோம். பட்டியல் இனத்தக் காப்போம்னு சொல்லியே பிராமண இந்திரா காந்திய ஆதரிச்சோம். ஹிந்தி ஒழிகன்னு சொல்லி, நாம நடத்தற ஸ்கூல்கள்ல ஹிந்தி சொல்லிக்குடுத்து டப்பு பார்த்தோம். பண்டாரப் பரதேசிகள்னு சொல்லிட்டு வாய் உலர்றதுக்குள்ள பாஜகவோட 99ல கூட்டணி வெச்சோம். 2003ல மோதி நல்லவர்னு தலைவர் சொல்லி பேட்டியெல்லாம் குடுத்தாரு. ஆனா இப்ப மோதிய எதிர்க்கறோம். இதுல நமக்குக் கொழப்பமே இல்லியே..

காங்கிரசோட ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு சொன்னாரு தலைவரு. கூடா நட்பு கேடாய் முடிந்ததுன்னு சொன்னாரு. ஒடனே கூட்டணியும் வெச்சுக்கல்லியா ? கொஞ்சமாவது பகுத்தறிவோட யோசிப்பா..கொழப்பமாம் கொழப்பம்.

ஒண்ணும்மில்லையா, முரசொலி மாறன் ஆஸ்பத்திரிலயே இருந்த வரைக்கும், செலவப் பார்த்துக்கிட்டு பாஜகவோட கூட்டணில இருந்தோம். அவர் காலமான ஒடனே காங்கிரசோட போகல்லியா.. கட்சிக்கே கொழப்பம் இல்லியே, நீ ஏன் கொழம்பற?’ 

‘என்ன இருந்தாலும் முர்மு பட்டியல் பழங்குடிப் பெண். அவங்கள எதிர்த்து, உயர்சாதி மேட்டுக்குடி முன்னாள் பாஜகவுக்கு ஓட்டுப் போடும் படி செஞ்சுட்டாரே மோதி, அதையும் நாம சுயமரியாதை இல்லாம ஃபாலோ பண்றோமேன்னு கொஞ்சம் நெருடலா இருக்கு..’

‘அட போப்பா. பெட்ரோல ஜி.எஸ்.டி.ல கொண்டு வரணும்னு நம்ப எம்பி சொல்றாரு. கொண்டு வரக் கூடாதுன்னு நம்ம அமைச்சர் சொல்றாரு. ரெண்டு பேரும் ஒரே கட்சி தானே? ரெண்டு பேரும் சந்திச்சுக்கும் போது நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டு போகல்லியா? பொழப்பு நடக்கணும்னா இதுல மானம் எல்லாம் பார்க்கக் கூடாது. முன்ன ஒண்ணு சொல்லணும். பின்ன அதையே எதிர்க்கணும். ரெண்டுமே தெரியாத மாதிரியே ஓட்டிடணும்.. புரியுதா?’ 

‘நீங்க தலைவருங்க.. முன்ன பின்ன இருக்கலாம். ஆனா, நாங்க தொண்டனுங்க இல்லியா? ஊர்ல ஒரு பயலும் மதிக்க மாட்றான்..’

‘இதப்பாரு.. அக்கா என்ன சொல்லிச்சி? நாங்க ஆட்சிக்கி வந்தா எங்க ஆளுங்க நடத்தற சாராய ஆலைய முடுவோம்னிச்சா ? ஆனா மூடினோமா? இப்ப கேட்டா நமுட்டு சிரிப்பு, பொறவு ஒரு வணக்கம். அப்டியே ஓட்டம். அது மட்டுமா? ஆட்சிக்கு வந்த ஒடனே சீட்டுல ஒக்காரறதுக்கு முன்னாடி டாஸ்மாக் ஒழிப்பு ஃபைலுல கையெழுத்துன்னு சொன்னோம். செஞ்சமா ? அதால, ரொம்ப பதட்டப்படாம இதெல்லாம் கடந்து போகும்னு பேரறிஞர் தம்பி சொன்னாருன்னு நெனைச்சுகினு போயிடு..புரியுதா ? ‘

‘புரியற மாதிரி இருக்கு.. ஆனா, வீட்டுக்காரி கூட எளக்காரமா பாக்குறா.. அதான்..’

‘இதுக்கெல்லாம் நம்ம நியூஸ்காரங்களப் பார்த்துக்கோ.. அவங்க நிம்மதியா சாப்புட்டு தூங்கல ? ஸ்டெர்லைட் விஷயத்துல மக்கள் அதிகாரம் குரூப்ப ஆதரிச்சு எழுதினாங்க, பேசினாங்க. ஏன்? அப்ப நாம ஆட்சில இல்ல. இப்ப கள்ளக்குறிச்சி விஷயத்துல அதே குரூப்புக்கு பங்கு இருக்குன்னு போலீஸ் சொல்லுது. இப்ப காதுல விழாத மாதிரி நிக்கல அவங்கள்ளாம். ஏன்? ரெண்டுக்கும் சோறு கெடைக்கறது ஒரே எடத்துல தான். அதால கம்முனு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இல்லாத மானம், ரோஷம் ஒனக்கு வந்திரிச்சா ? எதாவது கட்சி மாறிட்டியா என்ன?’

‘இல்லீங்க, அவங்கள்ளாம் படிச்சவங்க.. மானம் ரோசம் எல்லாம் பார்த்தா பொழப்பு நடக்குமா? ஆனா நான் அப்டி இல்லியே..’

‘இதுக்குதான் நாலு எளுத்து படின்னு சொல்றது. புரியிதா ஏன் படி படின்னு சொல்றாங்கன்னு? இந்த மாதிரி கொழம்பாம இருக்கறதுக்கு தான் எழுதப் படிக்கச் சொல்றாங்க..இது தான் #திராவிடமாடல். புரியுதா?’  

‘ஒண்ணு மட்டும் புரியுதுங்க.. சின்ஹாவோ முர்முவோ, யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரு சங்கிக்கு மட்டுமே ஓட்டு போடறது நம்ம தலை எழுத்தா ஆயிடுச்சி பார்த்தீங்களா? இது என்ன மாடலா இருக்குமுங்க?’- ஆமருவி (www,amaruvi,in) 

One thought on “புதிய திராவிடமாடல்

Leave a comment