‘நான் இராமானுசன்’ வெளியீட்டின் மூலம் கிடைத்த ரூ.35,000 இன்று சென்னையில் உள்ள ஓராசிரியர் வேத பாட சாலைக்கு வழங்கப்பட்டது. என் பெற்றோர் என் தம்பியுடன் சென்று வழங்கினர். அங்கு பயிலும் மாணவர்களின் உணவு உறைவிடச் செலவுகளையும் இந்த ஆசிரியரே கவனித்து வருகிறார். ‘வேதோ ரக்ஷதி ரக்ஷித:’ என்பர். வேதத்தை நாம் காப்பாற்றினால் வேதம் நம்மைக் காக்கும் என்பது பாரதப் பண்பாட்டில் இருந்துவரும் நம்பிக்கை.
இந்த நூல் மூலம் இப்படி ஒரு நல்ல செயல் செய்ய உதவிய வாசகர்களுக்கும், இந்நூலை எழுதவைத்த இராமானுச குருவிற்கும் என் பணிவான, தெண்டன் சமர்ப்பித்த வணக்கங்கள்.
சில படங்கள் உங்கள் பார்வைக்கு :
P.N.Badhri
September 25, 2016 at 10:57 pm
Please inform the address so that others also contribute for their yeoman services.
LikeLike