நயந்தாரா, த்ரிஷா, தமன்னா மூவரில் யார் அழகானவர்கள்?
எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களை விட அழகான பெண்கள் எங்கள் ஊரில் உண்டு. நம்பிக்கை இல்லையா?
‘அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே’ என்கிறார் திருமங்கையாழ்வார்.
தேரழுந்தூர்ப் பெண்டிர் அம்பைத் தோற்கடிக்கும் அளவு கூர்மையான கண்களை உடையவர்களாம். அது மட்டும் அல்ல. அவர்கள் ஐந்து குணங்கள் கொண்ட கூந்தல் உடையவர்களாம். ( ஐம்பால்)
அது என்ன ‘ஐம்பால்’? இரு வகையாக வியாக்யானம் சொல்கிறார்கள்.
அரும்பத உரையாசிரியர் சொல்வது :
1. கந்தம் ( நறுமணம்)
2. மது ( தேன்)
3. மார்தவம் (மென்மை)
4. ஸ்நிக்தை (அடர்த்தி)
5. இருட்சி (கருமை)
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வியாக்யானம் பின்வருமாறு:
1. சுருண்டிருத்தல்
2. நீண்டிருத்தல்
3. அடர்ந்திருத்தல்
4. கறுத்திருத்தல்
5. நறுமணம் கொண்டிருத்தல்.
இப்போது முதல் வரியைப் படியுங்கள்.
பி.கு: ஆழ்வார் சொன்னது கி.பி. 9ம் நூற்றாண்டு.
nparamasivam1951
October 22, 2016 at 7:33 pm
பி.கு. அபாரம்
LikeLike