இந்தியன் வங்கியில் ஊழியர்கள் ஏன் இவ்வளவு அசமஞ்சமாக வேலை செய்கிறார்கள் என்று நொந்துகொண்டே அந்த அம்மையாரின் முன் அமர்ந்திருந்தேன். 15 மணித்துளிகள் கடந்திருந்தன. அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பேசினார். 2 நிமிடங்கள்.
‘சரி, உங்களுக்கு என்ன வேணும்?’
‘மேடம், அந்த லாக்கர ஓப்பன் பண்ணனும். சொன்னேனே.’
‘ஆங், சொன்னீங்களே. அக்கவுண்ட் விஷயம் முடிச்சுட்டு பண்ணலாமா?’
‘சரி. என்ன டாக்குமெண்ட்ஸ் வேணும்? பாஸ்போர்ட், விஸா?’
‘லாக்கருக்கு அதெல்லாம் வேணாம் சார்.’
‘இல்ல அக்கவுண்ட் பத்தி பேசறேன். எஸ்.பி.அக்கவுண்ட்ட என்.ஆர்.ஓ ஆக்கணுமே, அது..’
‘அதான் லாக்கர் முடிச்சுட்டு பண்ணலாம்னு சொன்னேனே’
‘இல்ல மேடம், நிங்க தான்..’
‘ஸார், நான் ரொம்ப தடுமாறறேன் இல்ல? ரொம்ப ஸாரி’
‘…’
‘இல்ல. நீங்க வெளிலேர்ந்து வந்திருக்கீங்க. ஆயிரம் வேலை இருக்கும். ஆனா என்ன பண்றது? கொஞ்சம் பர்சனல் பிராப்ளம். அதான் இன்னிக்கி காலைலேர்ந்து தடுமாறறேன்.’
‘ஸாரி மேடம். டேக் யுவர் டைம்’
‘இல்லை, பிரதர் -இன்லா இப்ப காலைல காலமாயிட்டார். இப்ப கிளம்பணும். அடுத்த வாரம் அவர் பொண்ணுக்குக் கல்யாணம். மேனேஜ் பண்ணவே முடியல்ல. அட்டன்ஷன் ரொம்ப டைவர்ட் ஆகுது’
‘ஓ, ஐ ஆம் ஸாரி.. ‘
‘இல்ல உங்கள முடிச்சுட்டு போறேன்.’
‘வேண்டாம் மேடம். நீங்க கிளம்புங்க. வேற ஆபீசர் பார்க்கட்டும்’
‘இல்ல சார். நீங்க வெயிட் பண்ணினீங்களே. நானே அட்டண்ட் பண்ணிட்டுப் போறேன்.’
‘நீங்க ஆபீசுக்கு வந்திருக்கவே வேணாமே. எதுக்கு வந்தீங்க?’
‘இல்ல, காலைல அவருக்கு உடம்பு முடியலன்னு போோன் வந்துது..டிஸ்டர்ப் ஆயிட்டேன்.போயிட்டார்னு இப்பதான் போன் வந்தது.இருக்கட்டும்.நீங்க டாக்குமெண்ட்ஸ் எடுங்க..’
தயவு செய்து முதல் வரியைப் படிக்காதீர்கள்.#பாரதம்