‘அறம்’ என்றொரு இடதுசாரித் திரைப்படத்தை ஏர்-இந்தியா காண்பித்தது.
போர்வெல்லில் தவறி விழும் குழந்தையை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட கலெக்டர் மதிவதனி(பெயரைக் கவனிக்கவும்) முயல்கிறார். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த நிகழ்வில் படம் முழுவதும் இந்திய எதிர்ப்பு வசனங்கள். குறிப்பாக இஸ்ரோ எதர்ப்பு வெளிப்படை. அடிக்கடி இஸ்ரொவின் ராக்கெட் காட்டப்படுகிறது. டி.வி. பேட்டியில் ஒரு முட்டாள் ‘ராக்கெட் கனிம வளங்களைக் கண்டறியவே செலுத்தப்படுகிறது என்கிறான். ஆளை எங்கோ பார்த்த முகமாக இருக்கிறது. ஜி.பி.எஸ்., புயல் முன்னறிவிப்பு, கடல் வளப்பாதுகாப்பு, தொலைதூரக் கல்வி, தொலவு-மருத்துவம், அந்த மூட-பேட்டியாளன் பங்குபெறும் டி.வி. நிகழ்ச்சியை மக்கள் பார்க்கவும் கூட செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இவை தவிர மற்ற நாடுகளை வேவு பார்க்கவும், நமது ராணுவத் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுவதுண்டு. ராக்கெட் ஏவ வசதி, பணம், தொழில்நுட்பம் இல்லாத நாடுகள் பலவற்றிற்கும் இந்தியாவே குறைந்த செலவில் உதவுகிறது. அடிப்படை அறிவு வேண்டாம், அடிப்படை அறம் இல்லாமல் பேட்டி நடக்கிறது.
இந்த அழகில் குழந்தையின் உயிருக்கு மிகுந்த ஆபத்து ஏற்படும் நேரத்தில், மக்களின் உணர்ச்சி பொங்கியிருக்கும் நிலையில் கலெக்டர் பிரச்சாரம் செய்கிறார். குழிக்குள் இறங்கும் சிறுவனிடம் ‘இந்தியா போன்ற நாடுகள்ல..’ என்று அறிவுரை சொல்லி ஊக்கம் ஊட்டுகிறாராம். படத்தில் பல இடங்களில் ‘இந்தியா போன்ற நாடுகள்ல..’ வருகிறது.
உச்சகட்ட வெறுப்பு ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா’ பாடலை ஒரு குடிகாரன் இழிவுபடுத்துவது.
எந்த சினிமாவும் பார்க்கக்கூடாது என்றும், குறிப்பாகத் தமிழ் சினிமா பார்ப்பதே இல்லை என்றும் சில ஆண்டுகளாக இருந்துவருவது என்ற எனது முடிவு மிகச்சரியானதே என்பதை எனக்கு உணர்த்தியது ‘அறம்’.
கலை, இலக்கியம் என்கிற போர்வையில் தேசத்தையும் அதன் வெற்றிகளையும் இழிவுபடுத்துவது முற்போக்கு என்றால் நான் முற்போக்காளன் அல்லன்.
‘அறம்’ = எள்ளளவும் அதைத் தன்னகத்தே கொள்ளாத படம்.
என்னவோ தெரியவில்லை, தமிழ் படங்கள் எல்லாம் இடதுசாரி / எதிர்மறை/ வன்முறை/ தேசவிரோத படங்களாகவே உள்ளது. நாம் தான் சினிமாவிற்கு செல்லாது இருக்கவேண்டும்
LikeLike
correct sir.
LikeLike