‘நீ தமிழ்ப் புஸ்தகங்களை ஏன் படிக்க மாட்டேங்கற?’ மத்திய அரசுப் பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு பயிலும் என் மகன் பரத்தைக் கேட்டேன்.
‘இல்லையே. டெக்ஸ்ட் புக் படிக்கறேனே’ போனில் இருந்து தலை தூக்காமலே பதில் சொன்னான்.
‘அதில்லை. லைப்ரரில வாரத்துக்கு 2 புஸ்தகம் வாங்கிப் படிக்கற. எல்லாம் இங்கிலீஷ். ஆனா, நாலு வருஷத்துல எவ்வளவு தமிழ்க் கதைப் புஸ்தகத்தைப் படிச்சிருப்பே?’ நான்.
‘ஒண்ணே ஒண்ணு’ உண்மையாகப் பதிலளித்தான். அதுவும் ‘எஸ்.ராமகிருஷ்ணன் குழந்தைகளுக்கான நாவல் ஒன்றை எழுதியிருந்தார், அதைப் படித்தே ஆக வேண்டும் என்று நான் வற்புறுத்தியதால் பாதியளவு படித்திருந்தான். ஆனால், ஆங்கில நாவல்கள் சுமார் 100 வாசித்திருக்கிறான்.
பல முறை தமிழ்க் கதைப் புத்தகங்களைப் படிப்பது பற்றி அவனிடம் பேசியிருக்கிறேன். தமிழ் நூல்கள் அவனைக் கவரவில்லை என்று தெரிந்திருந்தும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என் பெரிய மகன் ( இவனது அண்ணன்) சொன்னது “Show me an equivalent of Harry Potter or Eragon. I will definitely read Tamil books.” பொன்னியின் செல்வனைப் படித்திருந்தவன் பேசிய பேச்சு அது.
பரத்: சொன்னா கோச்சுக்கக் கூடாது. தமிழ் புக்ஸ் இண்றஸ்டிங்கா இல்ல. அதான் காரணம்.
நான்: எதாவது உதாரணம் சொல்லேன். How could you generalise?
பரத்: ஸ்கூல் புக்ஸ்லேர்ந்தே சொல்றேன். இங்கிலிஷ் புக்கையும் தமிழையும் கம்பேர் பண்ணி சொல்றேன். ஒகேவா?
நான்: சரிதான். But the comparison should be fair.
பரத்: இங்கிலீஷ்ல Non-detailedல H.H.Munro, O Henry, R.K.Narayan இவங்களோட ஸ்டோரீஸ்லாம் வர்றது. அதுல ஒரு டெப்த் இருக்கு. ஆனா தமிழ்ல அப்பிடி இல்ல.
நான்: இன்னும் டீட்டெயில் தேவை.
பரத்: The Open Window. Saki( Munro) எழுதினது. ஒரு ஆள் வீடு பார்க்கப் போறான். அங்க ஒரு பொண்ணு அவங்கிட்ட பேய்க்கதை சொல்றா. ஜன்னல் வழியா வரும்ங்கறா. அவ அத்தையும் அதையே சொல்றா. அவன் வெளில பார்க்கறான். செத்துப் போனதாச் சொன்ன்ன மூணு பேரும், நாயும் வந்திண்டிருக்கு. ஆள் அலறி அடிச்சுண்டு ஓடறான். வந்தவங்க கேக்கறாங்க – ஒரு ஆள் ஓடினானே ஏன்னு? அதுக்கு அந்த பொண்ணு சொல்றது – அவன் நாயைப் பார்த்து ஓடியிருக்கான். முன்னாடி ஒரு தடவை வெறி நாய்கள் சிலது சேர்ந்து இவனைத் துரத்திண்டு வந்துதாம். ஒரு ராத்திரி முழுக்க சுடுகாட்டுல ஒரு புத குழில விழுந்து கிடந்தானாம். அதனால பயமாம்.’ இது தான் கதை. இதுல சொல்லாம சொல்றது என்னன்னா அந்தப் பொண்ணுக்கு க்ஷணப் பொழுதுல கதையை இட்டுக் கட்டிச் சொல்ற பழக்கம் உண்டுங்கறதுதான்.
கதைல எல்லாமே வெளிப்படையா இருக்கப்படாது. நாமளும் கொஞ்சம் ஊகிக்கணும். அதுதான் சரி. அதே மாதிரி ஆர்.கே.நாராயணனோட ‘The Green Blazer’, ரவீந்திர நாத தாகூரோட ‘A fest for rats’, ஓ ஹென்றியோட ‘The Cop and the Anthem’ இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் இங்கிலீஷ் Non-detailல இருக்கு. கதைகள்ல ஒரு ட்விஸ்ட், நிறைய ஹூமன் எமோஷன்ஸ், ஸர்ப்ரைஸ் எல்லாம் இருக்கு. இதப் படிக்கறதே ஜாலியா இருக்கும்.
நான்: தமிழ்ல ?
பரத்: ஒரு கதை வர்றது. மரம் பேசற மாதிரி இருக்கும். ஆனா ஒரே உபதேசமா இருக்கும். மரம் பேசறதுன்னா First Personல தானே பேசணும்? இங்க அப்பிடி ஆரம்பிச்சு Third Personல கண்டின்யூ ஆறது. ஒரே அக்யூசேஷன். கதை கதையா இருக்கணும். மாரல் இருக்கட்டும். ஆனா, மாரல் மட்டுமே கதை இல்லையே.
நான்: இன்னொரு கதை இருக்கா தமிழ்ல?
பரத்: இருக்கு. அது இன்னும் நன்னாயிருக்காது. ஒரு சூபி பரத்தடில இருக்கற சோகமான பணக்காரனப் பார்க்கறார். ஏன் சோகமா இருக்கேன்னு கேக்கறர். என் பணத்தையெல்லா யாராவது எடுத்துண்டு போயிடுவாளோன்னு பயமா இருக்கு, அதால சோகமா இருக்கேங்கறான். உடனே அவர் அந்தப் பனத்தை எடுத்துண்டு ஓடறார். பணக்காரன் துரத்தறான். சூபி மரத்தடியில பணத்தப் பொட்டுட்டு ஒளிஞ்சுக்கறார். ‘பணம் கிடைச்சுடுத்து, நான் சந்தோஷமா இருக்கேன்’ அப்பிடின்னு பணக்காரன் சொல்றான். சூபி வெளில வந்து ‘பார்த்தியா, வேணுங்கற அளவுக்கு மட்டுமே பணம் இருந்தா சந்தோஷமா இருக்கலாம். நான் அப்பிடித்தான் இருக்கேன்னு சொல்றார். இதுதான் கதை.
நான்: நல்ல விஷயம் தானே இருக்கு கதைல?
பரத்: பணக்காரர் ஓடும் போது ‘என் பணம் போயிடுத்தே’ந்னு கத்திண்டே பயந்துண்டே ஓடறார் இல்லியா? அந்த எமோஷன்ஸ் கடைசி வரைக்கும் Carry-forward ஆச்சா? இல்லையே. உடனேயே ‘நான் சந்தோஷமா இருக்கேன்’ங்கறார் அவர். ஒரு கண்டினியூட்டி இல்லை கதைல. அறிவுரை சொல்லியாகணும்னே ஏதோ எழுதின மாதிரி இருக்கு.
நான்: அப்ப, எப்படித்தான் எழுதணும்ங்கற?
பரத்: என்னப்பா இது? எங்களுக்கு மாரல் சொல்லிண்டே இருக்கற கதையெல்லாம் வேண்டாம். கதைல கற்பனை இருக்கணும். நல்ல ஆதர்ஸ் எழுதினதா இருக்கணும். தமிழ்ப் பாடப் புஸ்தகத்துல ஏதோ இவாளே இமேஜின் பண்ணிண்டு எழுதின மாதிரி, ஏதோ எழுதணுமேன்னு எழுதின மாதிரி தெரியறது.
நான்: இங்கிலிஷ் பாடப் புஸ்தகம் CBSEயோடது. தமிழ்ப் பாடப் புஸ்தகம் தமிழ் நாடு கவர்மெண்டோடது. அதால வித்தியாசம் இருக்கலாமோ?
பரத்: இருக்கலாம். எங்க கிளாஸ்ல ஹிந்தி ஸ்டூடண்ட்ஸ் இருக்கா. அவாளுக்கெல்லாம் நல்ல ஸ்டாண்டர்ட் புக்ஸ் இருக்கு. எங்களோட செகண்ட் லாங்வேஜ் புக் ( தமிழ்), தேர்ட் லாங்வேஜ் ஹிந்தி புக் லெவல்ல இருக்கு. நாங்க படிக்கற தேர்ட் லாங்வேஜ் புக் இப்ப மூணாங்கிளாஸ் ஹிந்தி பசங்களோட செகண்ட் லாங்வேஜ் புக். Eighth standard children’s second language book should not be like a third standards’s second language, right?
நான்: அப்ப என்னதான் பண்றது?
பரத்: நல்ல எழுத்தாளர்களோட கதைகள் எல்லாம் பாடப் புஸ்தகத்துல இருக்கணும். மாரல் சொல்லியே ஆகணும்னு கட்டாயம் இல்லை. நல்ல கதையா இருந்தா நாங்களே படிச்சுப்போம். அப்புறம் நாங்கள்ளாம் அன்னிக்கி இப்பிடி இருந்தோம்னு சொல்லிண்டே இருக்கற பாடங்கள் அதிகம் வேண்டாம். அவ்ளோதான்’
சம்மட்டி அடி. அவன் சொன்ன கதைகளையும் வாசித்துப் பார்த்தேன். உண்மைதான்.
குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகிற, கிட்டத்தட்ட எப்போதுமே வழங்கி வருகிற எழுத்து வடிவங்களை உடைய ஒரு மொழியில் இக்காலக் குழந்தைகளைக் கவரும் விதமாகக் கதைகள் இல்லை என்பது பெருங்குறையே.
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசு – கொஞ்சம் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கான தமிழ் எழுத்தாளர்களையும் சேர்த்துத்தான்.
CBSE புஸ்தகங்கள் சரியானவை என்று சொல்லவில்லை. ஆனால், பாட நூல் கழகம் வெளியிடும் நூலை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா அல்லது துணைப்பாடத்திற்காக வேறு கதை / கட்டுரைத் தொகுப்புகளின் துணையை நாடலாமா என்று கல்வியாளர்கள் / அரசு கொஞ்சம் பேசி முடிவெடுங்கள். பிள்ளைகளைக் கற்பனைத் திறனற்ற மந்தைகளாக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
மேலும் விவரங்களுக்கு இந்தக் கதைகளைப் படித்துப் பாருங்கள்:
- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வகுப்பு 8 – ‘மரத்தின் வேண்டுகோள்’ (பக் 95)
- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வகுப்பு 8 – ‘மகிழ்ச்சிக்கான வழி’ (பக் 43)
- Orient Black Swan Literature Reader – Trail of the Green Blazer – R.K.Narayan
- Orient Black Swan Literature Reader – The Open Window – Saki
- Orient Black Swan Literature Reader – The Cop and the Anthem – O Henry
- Orient Black Swan Literature Reader – A feast for rats – Rabindranath Tagore
உண்மை, should be given a serious thought! 🙏
LikeLike
Sir ,His questions seems to be right .Espicially where he talks about the First and Second person narrative. They are very clear story should be story.
I have read some tamil novels which would be first person, personally i love to read in that manner but most of them are not comfortable. They want a story .
Thanks
Ramkumar
LikeLike
He is fine with first person narrative, but doesn’t like person-switching. That is a clear indication of a lackadaisical approach to story telling.
LikeLiked by 1 person
Ok sir
LikeLike