மாணவர்களே, இன்று ஒரு முக்கியமான நாள்.
உலகிற்குப் பாரதத்தின் கொடையான யோகப் பயிற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து, உலக யோகா தினம் என்று அறிவித்த நாள்.
யோகப் பயிற்சிகள் உலகம் முழுமைக்குமானவை. மொழி, மதம், இனம், இடம், கண்டம் கடந்து உலகம் முழுவதற்கும் நன்மை பயக்கும் அரிய பரிசு யோகப் பயிற்சி.
யோகப் பயிற்சிகள் ஹிந்து மதத்திற்கு உரியன, ஆகவே அதனை அனுசரிக்க வேண்டாம் என்று பாரதத்தில் உள்ள பிற்போக்கு சக்திகள் சிறுபான்மையினரைத் தூண்டி விட்டன. ஆனால், இஸ்லாமியர்களுக்குப் புனிதமான நாடான சவூதி அரேபியா முதலாக 47 இஸ்லாமிய நாடுகள் யோகக் கலையை அங்கீகரித்து, அவற்றைப் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளன.
உங்களிடமும் சிலர் யோகப் பயிற்சிகள் ஹிந்து மதத் தொடர்புடையன என்று சொல்லலாம். அதனால் என்ன பரவாயில்லை என்று அவர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி, யோகப் பயிற்சிகளை நல்ல ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு பின்பற்றி வாருங்கள்.
இந்தப் பயிற்சிகளை எதிர்ப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்தி யோகக் கலைக்கு அங்கீகாரம் வாங்கித் தந்தது நமது பிரதமர் நரேந்திர மோதி அவர்கள். இதே அங்கீகாரத்தை முந்தைய பிரதமர் மன்மோஹன் சிங் வாங்கிக் கொடுத்திருந்தால் இவ்வளவு எதிர்ப்புகள், கேலிகள் வந்திருக்காது.
எதிர்ப்பவர்களின் நோக்கம் யோகம் அன்று. நரேந்திர மோதி.
இந்தக் கீழ்த்தரமான அரசியல் பார்வைகளால் கவனம் சிதறாமல், சரியான குருவிடம் யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, மன அமைதியுடனும், ஒருமைப்பாட்டுடனும் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெறுவீற்களாக. (போட்டோ : இணையத்திலிருந்து)
