‘மன்னனும் மடலும்’ பேருரையில் இன்று முனைவர்.செல்லக்கிருஷ்ணன் திருமங்கையாழ்வாரின் ‘சிறிய திருமடல்’ பற்றி உரையாற்றினார்.
வைணவத்தில் திருமாலை வழிபடும் ஐந்து நிலைகளைச் சொல்லி, அர்ச்சையில் நிறுத்தினார். திருமங்கையாழ்வார் 82 திவ்யதேசங்களைப் பாடியுள்ளார். அவரே நமக்கு அர்ச்சாவதாரத்தின் பெருமையை அதிக அளவில் சொல்லிச் சென்றார் என்று இணைத்தார் செல்லக்கிருஷ்னன்.
பெண்கள் மடல் ஏறுவது வழக்கம் இல்லை. வள்ளுவரும் இதையே சொல்கிறார். ஆனால், பரகால நாயகி பாவத்தில் திருமங்கைமன்னன் சிறிய திருமடலில் தனக்கும் பெருமானுக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இராமன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான் என்று சிறிய திருமடல் சொல்கிறது. ஆனால் இராமாயணம் இலக்குவன் அறுத்தான் என்கிறது. இந்த முரணை வியாக்யான கர்த்தர்கள் ‘இலக்குவன் இராமனின் கை போன்றவன். எனவே இராமன் அறுத்தான் என்பது சரியே’ (வாம ஹஸ்தம்) என்று நிறுவினார்.
தற்போது அவரது உரையின் காணொலி தயாராகிக்கொண்டிருக்கிறது. கிடைத்ததும் வெளியிடுகிறேன்.
இந்த உரையைப் போன்றே மாதந்தோறும் கோவிலில் திருமால் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெற சிங்கப்பூர் அரசின் இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்துள்ளது. அறிஞர்கள் பெருமளவில் பங்குபெற வேண்டும்.
சிங்கப்பூரில் நான் பங்கெடுக்கும் இறுதி நிகழ்ச்சியாகத் திருமங்கையாழ்வார் குறித்த சொற்பொழிவு நடந்தது அடியேன் செய்த பேறு.
Leave a reply to Amaruvi Devanathan Cancel reply