கல்யாணம் (எ) நிதர்ஸனம்

ஆனால், குடும்பம் எப்படிப் போனாலும், பெற்றோர் எந்த இழிச்சொல்லுக்கு ஆட்பட்டாலும், சமூகம் என்ன சொன்னாலும், என் இஷ்டப்படிதான் நடப்பேன், ஏனெனில் நான் ஒரு ‘லிபரேட்டட்’ பெண் என்று நினைக்கும் பெண்கள் இருக்கும் வரை, புத்திர பாசத்தால் தலை குனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட எத்தனையோ சுதாக்கள் மற்றும் ரகுநாதன்கள் தினம் தினம் மனம் புழுங்கிச் செத்துக்கொண்டேயிருப்பார்கள். இதுவும் நிதர்ஸனம்.

‘இன்னும் எழுதல்லையே, உங்கடவாளா இருக்கறதால எழுதல்லையா?’

 
‘ஏண்டாம்பி, பருப்பு சாதம் சாப்டுட்டு ‘நீட்’டுக்கு நீட்டி மொழக்கிண்டு ** விட்டுண்டே வந்தியே, இப்ப எங்க இருக்கே? அவான்னா மூடிண்டுடுவேளா?’
 
நேற்றும் இன்றும் வந்த கேலிகளில் வெளியிடத் தகுந்த இரண்டு இவை. இவர்கள் பாடகி ஶ்ரீமதி.சுதா ரகுநாதன் விஷயம் பற்றிக் கேட்கிறார்கள்.
 
ஒரு குடும்பத்தின் நிகழ்வு என்பதால் வாளாவிருந்தேன். கடமையை ஆற்றி விடுகிறேன். பரம வைதீகர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லலாம். 
 
இது ஒரு குடும்பம் தொடர்பான விஷயம். மூன்றாமவர் தலையிடுதல் தவறு மட்டுமன்று, அசிங்கமும் கூட.
 
இனங்கள் கடந்த காதல், மனங்கள் கடந்த உறவு, மதங்கள் கடந்த சேர்க்கை என்பது கேட்க நன்றாக இருக்கும். நடைமுறையில் பிரச்சனைகளே அதிகம். நிற்க.
 
சோனியா காந்தி பற்றி எழுத்தாளர் சோ சொன்னதாகக் குருமூர்த்தி சொன்னது: ‘ நான் சொல்வது கசக்கும். ஆனால் நிதர்ஸனம் இதுதான். ராஜீவின் மனைவி கறுப்பினப் பெண்ணாக இருந்திருந்தால் அவரைக் கட்சித் தலைவராகவும் பிரமர் வேட்பாளராகவும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்றிருக்க மாட்டார்கள்.’ இதை மனதில் கொண்டும், நமது குருதியில் ஊறியுள்ள கறுப்பு / வெளுப்பு மீதான வெறுப்பு / விருப்புப் பார்வையை கொண்டும் பார்த்தால், மணமகன் வெளுப்பு அமெரிக்கனாக இருந்திருக்கும் பட்சத்தில் நமது அறச்சீற்ற அந்தணர்கள் சற்று அடக்கியே அதிர்ந்திருப்பர்.’ சொன்னால் விரோதமிது, ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ’ ரகம் தான். வைபவர்கள் வையட்டும். நிற்க.
சிங்கப்பூரின் தந்தை அமரர் லீ குவான் யூவை விட ஒரு முற்போக்காளரைக் காண முடியுமா? அவரது மகள் ( பிரபல நரம்பியல் மருத்துவர் Dr.Lee Wei Ling) திருமண விஷயத்தில் திரு.லீ சொன்ன அறிவுரை நியாயமானது. (அவரது சுய சரிதையில் உள்ளது). இதனால் அவரைப் பிற்போக்காளர் என்று ஒதுக்க இயலுமா?
 
சுதா ரகுநாதன் பெண் விஷயத்தில் மணப்பெண் மதம் மாறி (மாற்றி), பின்னர் திருமணம் நடந்திருந்தால் வேறு விஷயம். ஆனால் இங்கு மணமகன் ஹிந்து தர்மத்தை விரும்பி ஏற்கிறான் என்கிறார்கள். இதை வரவேற்க வேண்டும். இதற்கான சம்ஸ்காரங்கள் இருக்கலாம். அவற்றைச் செய்து சம்பிரதாயதுக்குள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. நிற்க.
 
ஆனால்.. ஆனால்.. ஆனால்…
 
லவ் ஜிகாத் என்பது எத்தனை உண்மையோ, சில குடும்பத்துப் பெண்களைக் குறிவைத்து, பெரும் பண பலத்துடன் செய்யப்படும் ‘காதல் யுத்தங்கள்’ எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை பிராம்மணப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் Orchestrated காதல் கல்யாணங்கள். இதில் சமீபத்திய வரவு பண்ருட்டி, விழுப்புரம் பகுதகளைச் சார்ந்த செட்டியா, ரெட்டியார் சமூகப் பெண்களை மையப்டுத்திச் செய்யப்படும் காதல் பிரயத்னங்கள்.
 
பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த செட்டியார் குடும்பங்கள் மகள் கல்லூரிக்குச் செல்லும் முன் திருமணம் செய்து விடுகிறார்கள். படிப்பு முடிந்தவுடன் பெண் புக்ககம் செல்வாள் என்பது புரிந்துணர்வு ஒப்பந்தம். இதை நேரில் கண்டிருக்கிறேன். அப்படி அந்தச் சமூகம் த்னது பெண்களைக் காக்கிறது. சில லவ் ஜிகாத், Orchestrated காதல் பிரயத்னங்களால் பல குடும்பங்கள் அழிந்த பின் வந்துள்ள எச்சரிக்கை உணர்வு.
 
இதில் பிராம்மணக் குடும்பங்கள் விதிவிலக்கு. அவர்களுக்குத் தங்களை முற்போக்காகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ‘இல்லை, நாங்க ப்ராமின்ஸ் இல்லை. எல்லாம் சாப்பிடுவோம். ரொம்ப சோஷ்யல் டைப். அப்ப மாதிரி மடிசிஞ்சி கிடையாது. ஆஃபீசுக்கெல்லாம் திருமண் இட்டுண்டு வரமாட்டோம். எங்க சம்பிரதாயம் நாலு சுவத்துக்குள்ள தான். நாங்களும் செக்யூலர் தான். வாங்க, ஒரு பெக் போடலாம்’ என்று வேஷம் போட்டே ஆக வேண்டிய நிலையில் இருப்பதாகவே பிராம்மண சமூகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை முன்னேறியதற்கான அடையாளமாக, ‘I have arrived’ என்பதற்கான அடையாளக் கொடியாகக் கொண்டுள்ளது. இதுவும் நிதர்ஸனம்.

பிற்போக்கு என்று ஏசப்படுவேன் என்றாலும் சொல்கிறேன்.

படிப்பு தேவைதான். நல்ல படிப்பு அவசியம் தேவை தான். ஆனல், சம்பிரதாயப் படிப்பும் தேவையே. பிள்ளைகளுக்கு அவற்றையும் சொல்லிவைப்பது அவசியம். செக்யூலர் கல்வி என்கிற ஹோதாவில் சம்பிரதாயம் வேண்டாம், பண்டைய  நெறிகள் வேண்டாம், அவை பிற்போக்கு என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தால் இவ்வாறான விளைவுகளே ஏற்படும்.

இப்படிச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. ஏனெனில் எந்த முற்போக்குப் பத்திரிக்கையும், இலக்கியக் கழகமும் எனக்கு விருதளிக்கப் போவதில்லை. அதனால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்ள எனக்கு அவசியம் இல்லை. சபரி மலை விஷயத்திலும் நான் சம்பிரதாய நம்பிக்கைக்கே வாக்களிக்கிறேன். பெண்ணீயம் என்று வெற்றுக் கூச்சல் இட எனக்குத் தேவை இருக்கவில்லை. ஒரு அடையாளம் ஏற்படுவதற்காக கலாச்சார விழுமியங்களை மறுதலித்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.

‘கல்யாணப் பையன் சந்தியாவந்தனம் பண்றான், மடிசிஞ்சி’ என்று ஒதுக்கும் பிராம்மணப் பெண்கள், ‘இதப்பாருங்கோ, மாமியார், நாத்தனார்னு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கப்படாது’ என்று கட்டளை விதிக்கும் பெண்கள், ‘பொண்ணு மாடர்ன். அதுனால ஜீன்ஸ் போட்டுண்டே கோவிலுக்கு வருவா. சும்மா புடவை கட்டிக்கோ, சமையல் பண்ணுன்னு தொந்தரவு பண்ணாத இடமா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் தாயார்கள்,  ‘தீட்டு, மடி, ஆசாரம்னு நாட்டுப்புறமா இருக்கப் படாது. மாடர்னா சோசியலா இருக்கற ஃபேமிலியா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் பெற்றோர் இருக்கும் சமுதாயத்தில், ஒரு சுதா ரகுநாதன் தனது மகளுக்கு இந்துவாக விரும்பும் ஆப்பிரிக்க அமெரிக்கரைத் திருமணம் செய்ய அனுமதித்தது குற்றமில்லை.

ஆனால், குடும்பம் எப்படிப் போனாலும், பெற்றோர் எந்த இழிச்சொல்லுக்கு ஆட்பட்டாலும், சமூகம் என்ன சொன்னாலும், என் இஷ்டப்படிதான் நடப்பேன், ஏனெனில் நான் ஒரு 'லிபரேட்டட்' பெண் என்று நினைக்கும் பெண்கள் இருக்கும் வரை, புத்திர பாசத்தால் தலை குனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட எத்தனையோ சுதாக்கள் மற்றும் ரகுநாதன்கள் தினம் தினம் மனம் புழுங்கிச் செத்துக்கொண்டேயிருப்பார்கள். இதுவும் நிதர்ஸனம்.

இப்படியான பெற்றோர்கள் தாங்களும் புண்பட்டு, தங்களது பிள்ளைகளின் செயல்களை அங்கீகரிக்க முடியாமல், அதே சமயம் அங்கீகரித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அங்கீகரிப்புக்காகத் தங்களது குல குருக்களையும் அவர்கள் வகிக்கும் ஆஸ்தானங்களையும் கூட வம்புப் பேச்சிற்கு ஆளாக்குவதும் கூட நிதர்ஸனமே.

மேற்சொன்ன அனைத்து நிதர்ஸனங்களையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிதர்ஸன உலகத்தினரான நாம், அடுத்த நிதர்ஸனக் கல்யாணம் நடைபெறும் வரையில் வெறும் வாயை மென்றுகொண்டிருப்போம்.

அதுவே நமது நிதர்ஸனம்.

பி.கு.: பருப்பு சாதம் தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் ரோஷம் உண்டு. எனக்கெனக் கருத்துகள் உள்ளன. முற்போக்காகத் தெரிவதற்காகக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லாத அளவிற்குத் தன்மானம் உள்ளது. நன்றி.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

One thought on “கல்யாணம் (எ) நிதர்ஸனம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: