விளாக்குடி என்னும் தஞ்சை கிராமத்தைப் பூர்வ்வீகமாகக் கொண்ட வடகலை ஐயங்கார் பரம்பரையின் கதை ‘ a comma in a sentence’ நூல். கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய இந்த நூல் என் மனதிற்கு இதம் அளிக்கும் வகையில் அமைந்தது.
1800களில் துவங்கும் கதை 2013ல் முடிகிறது. வடகலை ஐயங்கார்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி, கொல்கொத்தாவில் குடி புகுந்து, படிப்படியாக முன்னேறி இறுதியில் ஹிந்துஸ்தான் லீவர் மற்றும் டாடா முழுமங்களின் தலைவராக முடிந்த கதை.
நல்ல ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுள்ளதால் மனசோர்வின்றி வாசிக்க முடிந்தது. 2-3 நாட்களில் வாசித்துவிடலாம். அடையாறு நூலகத்தில் உள்ளது. அமேஜானிலும் கிடைக்கிறது.
பி.கு.: சென்னைப் புத்தககக் காட்சியில் இந்த நூல் இடம்பெறவில்லை.
