‘வந்தவர்கள்’ நாவல் – விமர்சனக் கூட்டம் -1

‘வந்தவர்கள்’ நாவலின் முதல் விமர்சனக் கூட்டம் இணைய வழியில் நேற்று (28-01-2024) நடைபெற்றது. அதன் ஒலிப்பதிவு கீழே. கேட்டுக் கருத்துரையுங்கள். நூல் வாங்க +91-8148066645 – Swasam Books – அழைக்கவும்.

பிளவு – நூல் வாசிப்பு அனுபவம்

நீங்கள் இடதுசாரி முற்போக்கு வாசகராக இருந்தால் மேலே வாசிக்க வேண்டாம். மனம் புண்படும். அப்புறம் உங்கள் இஷ்டம்.

சுமங்கலித் தன்மைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாத பெண் பேராசிரியர், தனது இடது சாரித்தனம் தோய்ந்த பெண்ணீயக் கருத்துகளைத் தன் கல்லூரி மாணவர்களுக்குப் போதித்து, அவையே ஆதர்ஸம் என்று நம்ப வைத்தால் என்ன ஆகும் ? என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட சாத்தியங்கள் உள்ளன ? அந்த மாணவர்களும் தனது பேராசிரியரையே பின்பற்றி அவர் சொன்னவையே வேதவாக்கு என்று பாரதீயப் பாரம்பரிய வழிமுறைகளை வேண்டும் என்றே உதாசீனப்படுத்தினால் அவர்களது குடும்பங்கள் என்ன ஆகும் ? இந்தப் பின்புலத்தில் இந்திய அரசியல் சட்டங்கள் என்ன சொல்கின்றன, அவை நடைமுறையுடன் மாறுபடும் இடங்கள் யாவை ? அவற்றால் ஏற்படும் பிறழ்வுகள் என்று பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது ‘பிளவு’ நாவல்.

ಕವಲು ( Kavalu ) என்று கன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா 2010ல் எழுதிய நாவல் ‘பிளவு’ என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னடப் பெயரின் நேரடிப் பொருள் Cross Roads என்று தெரிகிறது. ஆனால், தமிழில் ‘பிளவு’ என்கிற பெயரில் உள்ளது இன்னும் பொருத்தமாகவே உள்ளது. ஏனெனில், நாவலின் கரு அப்படியானது.

பெண் பேராசிரியரின் நடவடிக்கைகள், அவரது கொள்கைகள், அவரது வெளி உலகத் தொடர்புகள் முதலியவற்றால் அவரது குடும்பம் சென்று சேறும் இடம் என்று ஒரு கதை செல்கிறது. அப்பேராசிரியரின் கொள்கைகளால் முழுவதுமாகக் கவரப்பட்ட மாணவியின் கல்லூரி வாழ்க்கை, பின்னர் அவர் வேலைக்குச் செல்வது, அதன் பின்னரான அவரது குடும்ப வாழ்க்கை முதலியவை பற்றிய இரண்டாவது கதை. பேராசிரியரின் கணவர், மாணவியின் கணவர் என்று அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய மூன்றாவது கதை. இவற்றுடன் இந்திய, மேற்கத்திய வாழ்க்கைகளின் ஒப்பீடுகள் என்று ஊடுறுவிச்செல்லும் நாவல் இலக்கியத் தரமான ஒன்றா என்று கேள்வி கேட்க இடங்கள் உள்ளன. ஆனால், நாவல் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.

குறியீடுகள் என்று பெரிதாக இல்லை என்றாலும், நாவல் காட்டும் தரிசனமானது, நமது இந்திய முற்போக்காளர்கள் மீதும், நவீனப் பெண் போராளிகள் மீதும் பாய்ச்சும் வெளிச்சம் என்பதே. பாரதீயப் பண்பாட்டை அழிக்க வேண்டி நமது கல்லுரி அமைப்பு, அதன் கல்வித்துறைத் தலைவர்களின் கொள்கைகள், அவர்களை இயக்கும் அமைப்புகள், முற்போக்கு மாதர் சங்கங்கள் போன்ற போர்வையில் சமூகத்தில் நஞ்சை விதைக்கும் பெண்கள் அமைப்புகள் என்று பல இடங்களை வெளிச்சப் பாய்ச்சலுக்கு ஆளாக்குகிறது ‘பிளவு’ நாவல்.

நாவலில் முறை தவறிய உறவுகள் உள்ளன. அந்த முறை தவறிய உறவுகள் என்பவை பெண்ணீயத்தின் ஒரு விழுமியம் என்கிற பார்வையை இடதுசாரிக் கல்லூரிப் பாடங்கள் மூலமாக நமது மாணவர்கள் கண்டடைகிறார்கள் என்பதைச் சுட்டிச் செல்கிறது நாவல்.

குடும்பப்பாங்கான பிள்ளைகள் கல்லூரிகளுக்குச் சென்று, நவீனத்துவம் என்கிற போர்வையில் பெறும் இடதுசாரிச் சிந்தாந்தக் கல்வியால் தங்களின் பாரம்பரிய அடையாளங்களை இழந்து நிற்பது பெண்ணீயம், நவீனத்துவ நோக்கு என்கிற பார்வையைப் பெறும் அவலம் நேரடியாகச் சொல்லப்படும் இடங்கள் நிகழ்கால நிதர்ஸனங்களைக் காட்டுவதை உன்னிப்பான வாசகன் கவனிக்கத் தவற மாட்டான்.

பாரதத்தின் அடித்தளமே குடும்பம் என்னும் கூட்டு தான். அடிப்படையான கட்டமைப்பு குடும்பம். அந்தக் குடும்பம் என்னும் ஆதாரம் தன் உறுப்பினர்களுக்குக் கொடுப்பது பண்பாடு என்னும் வலிமையை. அத்தகைய பாரதீயப் பண்பாட்டின் ஊற்றில் வளரும் குடும்பப் பெண் / ஆண், பாரதம் என்னும் பெரும் கலாச்சாரக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத அங்கத்தினன் ஆகிறான். அவன் தனது பண்பாட்டுப் பயிற்சியினாலும், தீவிர ஆன்மீகத் தேடல்களாலும் பாரதம் என்கிற வியத்தகு கட்டமைப்பின் வலுவை உறுதி செய்கிறான்.

பாரதம் என்கிற தேசத்தின் ஆன்மாவாக ஆகும் மேற்சொன்ன குடும்ப உறுப்பினன், தன் கல்லூரிப் பேராசிரியப் பதர்களின் இடதுசாரிப் பார்வை விஷ வீச்சால் தனது பாரதீயத் தனத்தை இழப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆகவே, முதலில் அவனிடம் / அவளிடம் சொல்லப்படுவது : உன் பண்பாட்டு அடையாளங்களை விட்டொழி. பெண்ணானால் குங்குமம் வைக்கதே. கூந்தலை வாரிப் பின்னல் போடாதே. காது, மூக்கு, கழுத்து, கை என்று எதிலும் எந்த அணிகலனும் அணியாதே. இவ்வாறு இவற்றை நிராகரித்தால், நீ பெண் என்பதால் உன் மிது போடப்பட்ட கலாச்சாரத் தளைகளை உடைத்து எறிய முடியும். நீ விடுதலை பெறலாம்.

மேலும், திருமணம் என்னும் பந்தம், அதில் வேறு நாடுகளில் இல்லாத அளவிற்குப் புனிதத் தன்மையை ஏற்படுத்துவது என்பனவும் ஒரு பெண்ணை எப்போதும் அடிமையாக வைத்திருக்க வழி வகுக்கும். ஆகவே, திருமணத்திற்குப் பின்னரே பாலுறவு, கணவனுடன் மட்டுமே பாலுறவு என்கிற கட்டுகள் பெண்ணை எப்போதுமே சங்கிலியால் பிணைத்த ஒரு மூச்சு முட்டும் அளவிற்கான சிறையே. ஆகவே, திருமணம் தவிர்த்து, லிவிங் டுகெதர் என்கிற வழிவகையானது, பெண்ணையும் ஆணையும் தேவையற்ற திருமணம் என்கிற பந்தத்தில் இருந்து காப்பாற்ற உதவி செய்யும்.

இம்மாதிரியான சிந்தனைகள் வசப்படும் பெண் / ஆண் மாணவர்கல் பாரத தேசத்தின் ஆன்மாவைப் பிளவுபடுத்தி, பாரத கலாச்சாரத்தை வேறோடு அழிக்க கருவிகளாக மாறிப் போகிறார்கள்.

இந்த விஷயங்கள் நேரடியாக இல்லாமல், கதையின் ஊடாகச் சொல்லப்பட்டுள்ள நாவல் ‘பிளவு’.

தமிழகத்திலும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பெண்கள் குறித்து ‘பலகாரக் கடையில் தின்பண்டங்களைத் தேர்ந்தெடுப்பது போல் பெண்கள் தங்களுக்குத் தேவையான ஆண்களைத் தெர்ந்தெடுக்க வேண்டும்’ என்னும் பொருள்படப் பேசியுள்ளது நினைவிற்கு வரலாம்.

நாவலில் முறையற்ற பாலுறவு குறித்த விவரங்கள் வருவது, மரபு சார்ந்த வாசகர்களுக்கு சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நாவல்: பிளவு. ஆசிரியர்: எஸ்.எல்.பைரப்பா. தமிழில் : ஜெயா வெங்கட்ராம். சுவாசம் பதிப்பகம். விலை ரூ: 420. http://www.swasambookart.com

வினயா – ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை – நூல் வாசிப்பு அனுபவம்

இப்படியான ஒரு நூலை வாசிப்பேன் என்று நினைத்ததில்லை. ஆனால், வாசித்தேன்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மலையாளியான வினயா, தனது இளமையில், தன் தாய் அனுபவிக்கும் பெண் சுதந்திரம் இன்மையைக் காண்கிறாள். சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் கண்டு கேள்வி கேட்கிறாள்.

இளமைக்காலத்தில் தான் அனுபவித்த வாழ்வு, தன் பள்ளிக்கூட நிகழ்வுகள், கிராம வாழ்க்கை, குறிப்பாக அதில் இருந்த பெண் சுதந்திரம் அற்ற தன்மை, பெண்களுக்கான கட்டுப்பாடுகள் என்று பலதையும் சொல்லும் வினயா, தன் குடும்பத்துக்குள்ளும் நடக்கும் ஆண் ஆதிக்கச் செயல்களையும் பதிகிறாள்.

தன் முயற்சியால் கேரளக் காவல் துறையில் காவலராகப் பணி நியமனம் பெறும் வினயா, அவ்விடத்திலும் பெண் காவலர்கள் நடத்தப்படும் நிலை குறித்தும் கவலைப்படுகிறாள். காவல் துறையில் பெண் காவலர்கள் சேலை அணிய வேண்டும் என்பது துவங்கி, காவல் பணியில் பெண் காவலர்களுக்கு என்று ‘மனிதாபிமான’ அடிப்படையில் காட்டப்படும் சலுகைகளையும் கூட எதிர்க்கிறாள். அச்சலுகைகளும் கூட பெண்களை ஒரு தரம் கீழே இருக்கச் செய்வதற்கான முயற்சிகளே என்பதையும் உணர்ந்து அவற்றைக் களைய முனைகிறாள்.

தான் காணும் பெண் சுதந்திரப் பறிப்புகளை நீக்க, கேரள காவல் துறைக்குள்ளேயே, துறை ரீதியாகப் போராடுகிறாள். இதனால் பணி இட மாற்றம், அவமானங்கள் என்று பலதையும் ஏற்கிறாள்.

துறைக்குள் நடத்தும் போராட்டங்களினால் பெரிய பலன் இல்லை என்று உணரும் நிலைகளில் சட்டத்தின் உதவியை நாடுகிறார் வினயா.

Vinaya Book

வினயாவின் முயற்சியால் கேரளக் காவல் துறையில் நிர்வாக ரீதியான பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பெண் காவலர்களின் உடை முதற்கொண்டு பல சமத்துவ உரிமைகள் கிடைக்கின்றன.

தனது போராட்டங்களினால் பல நண்பர்களியும் இழக்கும் வினயா, தனது குடும்பத்துக்குள்ளும் எதிர்ப்புகளைச் சந்திக்கிறார்.

மூன்று முறை தாற்காலிகப் பணி நீக்கம் மற்றும் ஒரு முறை நிரந்தரப் பணி நீக்கம் பெறும் வினயா, தனது போராட்டங்களை முடித்துக் கொள்வதாக நூல் முடிகிறது.

ஆனால், நிதர்ஸனத்தில் வினயாவிற்குப் பணி மீண்டும் கிடக்கிறது. 31-மே-2023 அன்று உதவி ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றுள்ள வினயா நிஜமான பெண்ணீயவாதியாகப் பரிணமிக்கிறார்.

மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நூலை குளச்சல் மு. யூசூப் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

நூலை வாசித்த பின்னர், பெண் காவலர்களைக் காணும் யாருக்கும் வினயாவின் செய்திகளே நினைவிற்கு வரும் என்பது என் எண்ணம்.

நூல்: வினயா – ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை. ஆசிரியர் – வினயா. தமிழில் : குளச்சல் மு.யூசூப். எதிர் வெளியிடு.

ஆலமரம் – நாவல் வாசிப்பு அனுபவம்

ஐயங்கார் கதைகள், ஐயங்கார் பற்றிய நாவல்கள் தமிழில் குறைவே. அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்த இடத்தை விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுதிய ‘ஆலமரம்’ நிரப்புகிறது. 

படிமங்கள், நிலைகள், குழப்பங்கள், குறியீடுகள், மிகை எழுத்துகள் என்று எதுவும் இல்லாமல், நேரடிக் கதை சொல்லல் ஆசிரியரின் பலம்.  

ஆலமரம் – நாவல்

மாங்கொல்லை என்னும் தஞ்சை கிராம ஐயங்கார் மிராசுதார் குடும்பம், சுமார் 120 ஆண்டுகளில், வந்து நிற்கும் இடத்தைப் பற்றியதே இந்த நாவல்.  மிராசு சிதைந்து சீரழிந்து சின்னாபின்னமாகித் தெறித்து விழ, தெறித்த ஒவ்வொரு துளியும் எங்கே என்ன செய்தது என்பதே கதை. ‘Period Novel’  என்னும் சட்டகத்துக்குள் வரும் இந்த நீண்ட நெடிய 957 பக்க நாவல், சில இடங்களில் ஆழ்ந்து, மெதுவாகவும், பல இடங்களில் ஓட்டப்பந்தயம் போலவும் ஓடி நிற்கிறது.

தஞ்சை கிராம பிராமண மிராசுகளின் வாரிசுகள் மேற்கொண்ட இடப்பெயர்வுகள அன்னாளைய வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னப்பட்டுக் காட்டப்படுகின்றன. நாவல் முழுவதும் தஞ்சை – சென்னை, சென்னை – தில்லி, சென்னை – அமெரிக்கா என்று மக்கள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் கண்கூடாகக் காணும் ஒன்றுதான் என்றாலும், இலக்கிய வடிவில் ஆவணப்படுத்தல் போல் உள்ள இந்த நாவல்  பிராமண இடப்பெயர்வைச் சுட்டும் முறையில் முதன்மையானது.  

தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் வைணவ பிராமணர்களும், ஸ்மார்த்த பிராமணர்களும் கல்வியைப் பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்க்கையில் மேலேறிச் செல்வது நாம் பலரது வாழ்விலும் கண்ட ஒன்றுதான். அது நாவலில் கண்கூடாகக் காட்டப்படுகிறது.  மிராசு வாரிசுகள் கல்வி இல்லாமல் அழிவதும் அல்லது வாழ்க்கையில் முன்னேறாமல் தத்தளிப்பதும், அவ்வாறு கல்வியைப் பற்றிக் கொண்டவர்கள் மேலேறிச் செல்வதும் நாவலில் மட்டும் அல்லாமல் யதார்த்த வாழ்விலும் நிகழும் உண்மைகள்.

கல்வி இல்லாத செல்வம் தரும் அழிவை வாசு பாத்திரமும், செல்வத்துடன் கூடிய நல்ல கல்வி தரும் மேன்மையை மைதிலி பாத்திரமும் சுட்டுகின்றன.  

பாரத விடுதலைப் போர் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. போராட்டத் தியாகிகளுக்கு தமிழ் வைஷ்ணவக் குடும்பங்களில் இருந்த / இல்லாத மரியாதையும் நமக்குத் தெரிவிக்கிறது நாவல். 

ஐயங்கார் விஷயங்கள் பலதும் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளன. நான்கு முறை சேவிக்கும் வடகலை ஐயங்கார் வழக்கம், ஒரு முறை / இரண்டு முறைகள் சேவிக்கும் தென்கலை ஐயங்கார் வக்கம், பஞ்ச சம்ஸ்காரம் என்னும் சங்கு-சக்கர தீட்சை முறை, அதைப் பெற்றவர்கள் மட்டுமே திவசம் முதலிய தினங்களில் தளிகை பண்ண அனுமதிக்கப்படும் பண்பாடு, ஐயங்கார் இல்லங்களில் தளிகை பண்ணப்படும் பக்ஷணங்கள், சாத்துமுது ( ரஸம் ) வகைகள் என்று நாவல் முழுவதும் இவை அனைத்தும் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றன. 

ஊரின் காவல் தெய்வத்தின் பரிவார தேவதாந்திரம் (வீரன்) ஒன்றின் சிலையை வீட்டின் பின் வைத்த நிகழ்வுடன் துவங்கும் நாவல், முடிவதும் அந்தத் தேவதையின் இடத்தில் தான். இந்த முறை நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கிறது. காவல் தெய்வங்களுக்கு வைஷ்ணவ இல்லங்களில், வழக்கங்களில் இடம் இல்லாமை சுட்டப்படுவது அருமை. சமாஸ்ரயணம் பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திர வழிபாட்டில் ஈடுபடாமல் இருப்பது இன்றும் தொடரும் வழக்கமே. 

கல்விப் புலன் அதிகம் உள்ள பாத்திரங்கள் வந்து சென்றாலும்,  அவர்களிடம் தத்துவப் பார்வைகள் முற்றிலும் இல்லாமல் இருப்பது ஒரு வியப்பே. சித்தாந்தக் கலந்துரையாடல்கள் துளிக்கூட இல்லாமல் அக்கால வைஷ்ணவ மிராசுக் குடும்பங்கள் வாழ்ந்துள்ளன என்பது சிறு நெருடலே. ஆனாலும், படிப்பறிவு அதிகம் இல்லாத மிராசுகளுக்கும் அவர்தம் மனைவிகளுக்கும் சித்தாந்தம் தெரியாமல் இருக்கவே வாய்ப்புண்டு என்றும் எண்ணிக்கொள்ளலாம். 

மிராசுகள் தம் மனைவியரை விட்டு, தஞ்சாவூரில் பரத்தை மகளிர் சகவாசம் கொள்வதும் நாவல் மூலம் அறிகிறோம். அக்கால சமூக ஒழுக்கங்களில் ஒன்றாகவே இது சொல்லப்பட்டாலும், அது தொடர்பான ஒரு தலைக்குனிவு இருந்ததையும் நாவல் காட்டுகிறது. அக்காலப் பெண்கள் கணவர்களிடம் அடிபடுவது அமோகமாக நடக்கிறது. அது ஏதோ சாதாரணமான ஒரு நிகழ்வாகச் சொல்லப்படுகிறது என்றாலும், தற்காலத்தில் அம்மாதிரியான சித்திரத்தை நினைத்துப் பார்ப்பது சிரமமாக உள்ளது.

யாரும் வசிக்காத பெரிய வீட்டை சம்ஸ்க்ருத பாடசாலைக்கு எழுதி வைக்கலாம் என்று வரும் ஒரு கட்டம்,  சுஜாதாவின் ‘கு.சி. பாடசாலை’ விஷயத்தை நினைவுபடுத்துகிறது. விறகு அடுப்பில் தளிகை பண்ணிக் கொண்டிருந்த குடும்பம் குமுட்டி அடுப்பிற்கு முன்னேறி, இறுதியில் காஸ் அடுப்பிற்கு வந்ததையும் நாவல் சுட்டுகிறது.

சுமார் பதினைந்து பேரின் மரணத்தை ஆவணப்படுத்தும் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் நீண்டதொரு மௌனமே மிஞ்சியது. 

வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதை என்று ஒரு சொல்லாடலில் கடந்து செல்லலாம் என்றாலும், இந்த நாவல் தமிழ்ச் சூழலில் வேறு யாரும் தொட்டுப் பார்க்காத ஒரு சரடைப் பிடித்து செல்கிறது. ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே. 

தமிழகத்தில் அதிகம் அறியப்படாத நாவலாக ‘ஆலமரம்’ திகழ்வது தற்காலக் கீழ்மைகளில் ஒன்று என்று கடந்துசெல்ல வேண்டியது தான். 

நாவல்: ஆலமரம். ஆசிரியர் : விஜயலக்ஷ்மி சுந்தரராஜன். பக்கங்கள்: 957. மணிமேகலைப் பிரசுரம். விலை: ரூ 420. 

நட்சத்திரவாசிகள் (Starlings) – a review

‘நட்சத்திரவாசிகள்’ literally translates as those ‘who live in the stars’. This has nothing to do with alien beings but the multitude of software services workers, gloriously called ‘IT-Engineers’, and the ancillary beings that serve them.

The Tamil novel by Karthik Balasubramanian has won the ‘Sahitya Academy Yuva Puraskar’ award – a national award that recognises young fiction talent. I chanced upon this novel at the Adyar Regional Library, Chennai and grabbed it for a week-end sojourn into the world of fiction.

The author has an IT services industry background and that shows in various ways in the novel. None other than an insider could’ve written so lucidly about the inner workings of the industry.

IT sector in India is distinctly different from the IT product companies that operate in the USA. The Indian scenario is replete with companies that provide offshoring services to the many US banks and other companies that seek to take advantage of the ‘follow the sun’ model to provide continuous services to their clients. So, while proceeding with the novel, one should keep in mind the difference between the US based IT product companies and the IT services companies that operate from within the Indian shores.

The characters that enter the novel represent the microcosm of the current IT services industry. ensuring representation from different strata of society, the characters lend themselves to the actual manipulation that the author subjects them to, and in most cases appropriately.

The power struggles and the not-so-acknowledged-yet-visible competition in the hierarchy chain are depicted in the most reliable manner. Author’s sharp sense of observation is eminently displayed in the characterisation and dramatisation of the events. The loneliness a character, Vivek, faces while on an on-site assignment and his oscillation between his loneliness at home in India, due to a failed love affair, and the loneliness awaiting him abroad is well elucidated. The ordinariness of the daily routine abroad and the characterisation of an elderly phantom in a coffee shop show the author’s brilliance in his depiction of Vivek’s state of mind.

Venu’s exit looks rushed. He is depicted as a one-down to Sathya, the leader. However, Venu is terminated in the most inglorious manner by a not so senior HR staff. The dramatics involved appear forced.

The novel speaks, in a whispered tone, about casteism in the industry. Nithilan, one of the main characters, wonders how Bharadwaj and Aarthi get an on-site assignment or a promotion while he himself doesn’t. The names give away the mind of Nithilan. This is confirmed when Venu, who is shown as panchakachcham wearing and bare-bodied in a house warming ceremony, is shown wondering that apart from himself, only Aarthi and Bharadwaj were vegetarian during a team lunch occasion. A not so subtle writer wouldn’t have taken so much pains to bring forth the point. He would’ve probably devised an interaction between Venu and Bharadwaj on the lines of the sacred thread worn by Iyers and Iyengars where Arthi would’ve pitched in with the differences between the Iyer and Iyengar ways of tying the traditional madisar saree. In this novel, the references to brahmin preference is pointed out in a subtle manner. Author deserves an appreciation for the technique and a criticism for the imagination.

நட்சத்திரவாசிகள்

The novel doesn’t talk about the much-talked-about discotheque and pub culture of the IT sector workers. And in this he paints an often unknown reality of hard working engineers overcoming poverty due to IT jobs. Kudos to the author on this front.

Author has begun the novel with Ramasubbu, an elderly security staff and ends the story with him, thus bringing to close the rather interesting stories of the different characters.

Unique story telling is evident in the way the diary jottings of a character and a conversation of another with Alexa are weaved into the overall scheme of things. This is a brilliant technique.

Many an occasion, the author comes on board to speak his mind and pontificate. This could have been avoided as only the characters have to speak in a novel.

A novel that has no precedent in Tamil excepting for ‘Marupadiyum’, a novel on retrenchment in the IT sector. And for heaven’s sake don’t bring in Vinayaka Murugan’s ‘Kizakku Kadarkkarai Saalai’ here. And heaven forbid you to even think of Chetan Bhagat’s half-baked works on the IT sector.

I, with 25 years of IT sector experience, consider Sahitya Academy’s Yuva Puraskar winning ‘ நட்சத்திரவாசிகள்’ (Starlings) refreshingly unique that portrays the realistic working of the Indian offshore IT industry, albeit with a Tamil slant, in all its splendour and some discolouration.

I have written this review in English as the book needs to reach a wider audience and thus enable an English translation of this important piece of work. I don’t think anything of this sort has been written in the Indian English fiction scene, yet. Hindi, I am not sure.

Novel : நட்சத்திரவாசிகள் Publisher : Kaalachuvadu Publications. Price : Rs 275.

நெய்வேலிக் கதைகள் – மதிப்புரை

கலைமகள் பத்திரிக்கையில் ‘நெய்வேலிக் கதைகள்’ நூல் மதிப்புரை வந்துள்ளது. வெளியிட்ட கலைமகள் நிறுவனத்தாருக்கு நன்றி.

நெய்வேலிக் கதைகள்

நூல் வாங்க, இங்கே சொடுக்கவும்.

கிண்டிலில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

a comma in a sentence – review

விளாக்குடி என்னும் தஞ்சை கிராமத்தைப் பூர்வ்வீகமாகக் கொண்ட வடகலை ஐயங்கார் பரம்பரையின் கதை ‘ a comma in a sentence’ நூல். கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய இந்த நூல் என் மனதிற்கு இதம் அளிக்கும் வகையில் அமைந்தது.


1800களில் துவங்கும் கதை 2013ல் முடிகிறது. வடகலை ஐயங்கார்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி, கொல்கொத்தாவில் குடி புகுந்து, படிப்படியாக முன்னேறி இறுதியில் ஹிந்துஸ்தான் லீவர் மற்றும் டாடா முழுமங்களின் தலைவராக முடிந்த கதை.


நல்ல ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுள்ளதால் மனசோர்வின்றி வாசிக்க முடிந்தது. 2-3 நாட்களில் வாசித்துவிடலாம். அடையாறு நூலகத்தில் உள்ளது. அமேஜானிலும் கிடைக்கிறது.


பி.கு.: சென்னைப் புத்தககக் காட்சியில் இந்த நூல் இடம்பெறவில்லை.

‘நேரா யோசி’ – வாசிப்பு அனுபவம்

சுதாகர் கஸ்தூரியின் ‘நேரா யோசி’ நூல் சரியான நேரத்தில் வந்துள்ளது. 

உலகம் தன் இயக்கத்தைச் சற்று நிறுத்தி, கொரோனாவினால் நின்று யோசிக்க வேண்டிய நிலையில் மக்களை வைத்துள்ள நேரத்தில் ‘நேரா யோசி’ நல்லதொரு பாதையைக் காட்டுகிறது. 

அறிவியல் புனைவெழுத்தாளரான சுதாகர் மனநல அறிவியலிலும் சிறந்து விளங்குவதை இந்த நூலில் காண முடிகிறது. மனிதன் எவ்வாறு தவறுகள் செய்கிறான்? தவறுகள் நிகழக் காரணங்கள் யாவை? மனம் சரியாக யோசிக்காமல் இருப்பது எதனால்? மனித மூளையில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன? இவற்றுக்கும் நமது அன்றாட வாழ்விற்காக நாம் சிந்தனை செய்வதற்கும் தொடர்புகள் யாவை? இந்தச் சிந்தனைகளைச் செம்மைப் படுத்த வழிகள் யாவை? தோல்விகள் ஏற்படும் காரணங்கள் யாவை? இப்படியான பல கேள்விகளுக்கு இந்த நூலில் விடைகள் உள்ளன. 

நேரா யோசி

அறிவியல், அதிலும் உயிரியல், மூளை, எண்ணங்கள் என்று குழப்புமோ என்கிற கவலைகள் எதுவும் இல்லாமல், தைரியமாகப் பலரும் வாசிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் மனித மனதின் செயல்திறன்கள், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவது என்று பல அறிவியல்பூர்வமான செய்திகள் எளிதில் வாசிக்கும் நிலையில் சொல்லப்பட்டுள்ளன. 

சுதாகர் கஸ்தூரி காட்டியுள்ள பல சுட்டிகள், எடுத்தாண்டுள்ள அறிவியல் வல்லுனர்களின் கருத்துகள் யாவும், பரபரவென்று இயங்கும் இன்றையக் காலக்கட்ட இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய வழிகாட்டியாக அமையும். 

 மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் ஆசிரியரும் தவறாமல் வாசித்து உள்வாங்க,  ‘நேரா யோசி’ பள்ளி நூலகங்களில் கட்டாயம இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

தினமணி / Pinnacle Publishers.

உப்பு வேலி – நூல் ஆய்வு

மறைக்கப்பட்ட வரலாறு வரிசையில், மூன்று தவணைகளாக ‘உப்பு வேலி’ நூல் ஆய்வு. சக்ரவியூகம் ஒளிவழியில். கண்டு கருத்துரையுங்கள்.

Cab Driver Stories – an introduction

We keep running all the time that we don’t even know we are running or what we are after. But Sudhakar Kasthuri doesn’t do that. He runs, for sure, but stops as he runs and listens to what others have to say and do, especially the hire cab drivers. While travelling long distances on work, he listens to the stories of the cab drivers and thus is born this book, ‘Cab driver stories ‘.

41mzv2zpy7l‘ Cab driver stories’ is such a book that would bring to the fore, the hidden world of cab drivers.

Sudhakar Kasthuri treats us to a repertoire of experiences of the drivers that produce myriad feelings that would leave one wondering ‘How did we miss this, thus far ?’

Sudhakar’s drivers speak multitude of languages ranging from Tamil to Marathi to Punjabi to Hindi and we are treated to drops of worldly wisdom, vendantic thoughts, radical extremist views that have a purpose, thoughts on repression in ordinary households et al.

Two stories that would bring the reader to tears are ‘Amme’ and ‘Lakshmanan’. There is a shortened version of the Gita as well, in the short story, ‘Manjit Singh’.

Sudhakar Kasthuri sparkles in his own right with his unpretentious writing that touches the reader in every story. Another Sujatha in the making, given the unexpected twist at the end of every story – classic definition of a short story.

Originally published in Tamil as ‘Valavan Kathaikal’ ( I had read that then and had derived great pleasure), this is the English translation of that pleasurable treasure. Jayanthi Sankar, a bilingual author herself, has translated into English without losing out on the essence and feel.

A fast read that would make you look at the often accosted common man, the cab driver,  in an entirely different light, from your next taxi ride.

Available in Amazon Kindle here.