சிங்கப்பூர் பிரதமரின் கருத்து சரியானதா?

‘50% இந்திய எம்.பி.க்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்’ என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளது தவறானது. ராஜ்ய சபாவை விட்டுவிட்டுப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நக்கல் அடித்துவிட்டுச் செல்வது எளிதான செயல். ஆனால், நாம் அப்படிச் செய்யப்போவதில்லை.

அவர் மற்றொன்றும் சொல்லியிருக்கலாம். சிங்கப்பூரில் பிரதமர், அமைச்சர்கள் முதலியோரின் கல்வித் தகுதி, அவர்களது தொழில், நிர்வாக அனுபவங்கள், சம்பளம் முதலியனவற்றையும் சொல்லியிருக்கலாம். அமெரிக்க அதிபரின் சம்பளத்தை விட தனது சம்பளம் அதிகம் என்பதையும் சொல்லி, நாட்டின் அளவிற்கு ஏற்ற சம்பளம் தானா என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள ஊடகங்கள் எத்தனை, மற்ற ஜனநாயகங்களில் எத்தனை என்பதையும் பேசியிருக்கலாம்.

சிங்கப்பூரில் பிரதமரையோ, மந்திரிகளையோ, அரசின் கொள்கைகளையோ எதிர்த்து ஃபேஸ்புக் பதிவிட்டவர்கள் மன நல மருத்துவமனைக்குச் செல்வது ஏன் என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம். அவர் குறிப்பிட்டுள்ள ஜனநாயகங்களில் அப்படி நடைபெறுகிறதா என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசத் தந்தை அமரர் லீ குவான் யூ அவர்கள் ஜவகர்லால் நேருவைப் பற்றிச் சொன்னதையும் சொல்லியிருந்திருக்கலாம்.

நேருவின் சோஷலிசக் கொள்கைகள் பற்றிச் சொல்லும் போது “It was my good fortune that I had several of these failed economies to warn me of this danger before I was in a position to do any harm in government,’ என்கிறார் லீ குவான் யூ. நேருவின் இந்தியாவை இன்றும் கொண்டிருந்தால் கியூபாவிடம் பிச்சை எடுக்க வேண்டியது தான்.

நேருவின் சோஷலிசம் பற்றி மேலும் சொல்லும் போது, “Like Nehru, I had been influenced by the ideas of the British Fabian society. But I soon realized that before distributing the pie I had first to bake it. So I departed from welfarism because it sapped a people’s self-reliance and their desire to excel and succeed. I also abandoned the model of industrialization through import substitution. When most of the Third World was deeply suspicious of exploitation by western MNCs (multinational corporations), Singapore invited them in. They helped us grow, brought in technology and know-how, and raised productivity levels faster than any alternative strategy could,” என்கிறார் லீ.

தேசம் சோஷலிசத்தில் தூங்காமல் இருந்திருந்தால், இன்று முழுமையான வல்லரசாகியிருக்கலாம். சோஷலிசத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டதால் சிங்கப்பூர் இன்று ஒளிர்கிறது. இதையும் பிரதமர் லீ சியன் லூங் கருத்தில் கொண்டு பேசியிருக்கலாம்.

இஸ்ரேலில் தற்போது பல கட்சிகள் சேர்ந்துமே கூட அரசு அமைக்க முடிவதில்லை என்பதைச் சொல்லியுள்ள பிரதமர், சிங்கப்பூரில் எத்தனை முறை எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன என்பதைப் பற்றியும் சொல்லியிருந்திருக்கலாம்.

ஒப்பீடு செய்வது என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஒப்பிட வேண்டியது தானே சரி?

என்னதான் சொன்னாலும், சிங்கப்பூர் போன்றதொரு தேசம் மற்றொன்று இவ்வுலகில் இல்லை. தண்ணீர் முதல் சகலத்தையும் இறக்குமதி செய்யும் தேசம் இன்று வளமான தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு அந்த தேசத்தின் தலைவர்கள் ஊழல் கறை படியாதவர்கள் என்பதே காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு ஊழல் கறை படியாமல், தேர்ந்த வல்லுநர்கள் மட்டுமே அரசில் பங்குகொள்ள முடியும் என்றும், ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய போரையே அமரர் லீ குவான் யூ நடத்தினார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்வது அவசியம்.

ஊழலுக்கு எதிரான அம்மாதிரியான போரைத் தற்போது நரேந்திர மோதி நடத்தி வருகிறார் என்பதையும் நாம் நினைவில் நிறுத்தி, சிங்கப்பூர் பிரதமரின் கருத்தைக் கவனிக்க வேண்டும்.

பிரதமர் லீ சியன் லூங்கின் கருத்து அவர் பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தில் ஒரு உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டதே தவிர, உள் நோக்கம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் சொன்னதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது என்பதையும் நமது எம்.பி.க்கள் உணர வேண்டும்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: