இலங்கையில் மீள் குடியேற்றம் வேண்டும்

இலங்கை கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் சொல்வது : “இலங்கைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பி.எஸ்.ஸி. படித்திருந்தால் அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்படும்.”

நல்ல விஷயம். என்னதான் கனடா, சுவீடன் என்று வெளி நாடுகளில் அகதிகளாய்க் குடியேறினாலும் சொந்த ஊர் போல் வராது தான். தம்பிகள் யோசிக்க வேண்டும். தமிழகத்தில் உங்களை வைத்து அரசியல் வியாபாரிகள் பேரம் நடத்தித் தங்களது வாழ்வை வளப்படுத்திக் கொண்டுள்ளனர். இனியும் நீங்கள் ஏமாற வேண்டாம்.

எனது நண்பர் ஒருவர் இலங்கை சென்று அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு சுய முன்னேற்றப் பயிற்சிகள் அளித்து வருகிறார். தனது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்னும் உத்வேகமே அவரை அதைச் செய்ய வைக்கிறது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பொருளீட்டுவதில் வெற்றி பெற்றுள்ள இலங்கையைச் சேர்ந்த தம்பிகள் இலங்கைக்குச் சென்று மீள் குடியேற முன்வர வேண்டும்.

இழந்த காலத்தையோ பொருளையோ உயிர்களையோ மீட்டெடுக்கவியலாது. இனி அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்று, வெளியில் நாம் கற்றதையும் பெற்றதையும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்போம்.

தமிழும் சைவமும் தழைத்தோங்கிய இலங்கையில் மீண்டும் அந்நிலை அடைய வழி செய்ய உறுதி பூணுவோம்

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: