நடமாடும் காந்தி உரையாடல் பாகம் 2

  • கே: ‘கமல் சார், போன வாரம் வந்திருந்தப்ப வேற கேள்வி கேக்கவே விடாம பதிலால திணற அடிச்சுட்டீங்க. இந்த வாரமாவது எதாவது கேள்வி கேட்கலாம்னு நினைக்கறேன்…’
  • ப: ‘கேள்வி கேக்க வேண்டியவங்களையே நீங்க கேக்கறதில்ல. ஆனா, எந்தக் கேள்விக்கும், கேள்வியே இல்லாம பதில் சொல்ற என்ன மட்டும் கேள்வி கேக்கறது என்ன நியாயம்னு நான் கேள்வி கேப்பேண்னு நினைக்கமாட்டீங்கன்னு நான் பதில் சொல்வேன்னு நினைக்கறீங்களா ?’
  • கே: பிரமாதம் சார். ஒண்ணும் புரியல. நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க. இப்ப கேக்க ஆரம்பிக்கட்டுமா?
  • ப: அப்ப இன்னும் கேக்கவே இல்லியா ? கேள்வி கேட்க வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இந்த நாட்டுல இருக்கு. ஆனா, கேக்காம இருக்கீங்க பாருங்க.. அதுனால தான் கோட்சே இன்னிக்கி ஆட்சி நடத்தறாருன்னு நான் சொல்வேன்னு நீங்க நினைக்கலாம். 
  • கே: ரொம்ப சரியாச் சொன்னீங்க. அப்ப நீங்க கோட்சே பிறந்த நாள் அன்னிக்கி பாராட்டினீங்களே ?
  • ப: ஹா ஹா.. மாட்டிவிடற மாதிரி கேட்டா நாங்க மாட்டிக்காம பதில் சொல்லுவோம். இது பால பாடம். நான் மத்திய ஆட்சியாளரச் சொன்னேன்ன்னு விளக்கிச் சொல்லுவேன்னு நினைக்கறீங்களா ?
  • கே: ஆக, நீங்க மாநில ஆட்சியாளரச் சொல்லல.. அதானே ?
  • ப: உங்க கேள்வியிலயே அதானி வாராரு பாருங்க. அதுதான் இந்த ஆட்சியாளர்களோட லட்சணம். கேள்வி பதில் கூட அதானி இல்லாமல் கேக்க முடியல இந்தக் காந்தி பிறந்த தேசத்துலன்னு நினைக்கற போது அந்தப் பொக்கை வாய்க் கிழவனோட பரிதாப நிலைய நினைச்சுக் கண்ணிர் உகுக்கற அவல நிலல இந்த நாடு இருக்கற நிலைய எண்ணி..ம்ம் ஹூம் ம்ம்
  • கே: அழாதீங்க கமல் சார். அடுத்த பாரதப் பிரதமர் உங்க ஆதரவு பெற்ற தமிழகத் தலைவர் தானே. அவர் ஏற்கெனவே தேசிய அரசியல்ல இருக்காரு பாருங்க.. அதால அவர் பிரதமர் ஆனப்புறம் சரி பண்ணிடலாம்.
  • ப: யாரு ? அவர் தேசிய அரசியல்ல இருக்காறா? யார் சொன்னா ? எப்பலேர்ந்து ?
  • கே: அட, பிறந்த நாள் விழாவுல அவரே சொன்னாரே, கேக்கலியா நீங்க ?
  • ப: ஓ அவரே சொன்னாரா? அப்ப சரியாத்தான் இருக்கும்னு சொல்ல வேண்டிய நிலைல நான் இருக்கேங்கறத நினைக்கற போது எங்கப்பா சிவாஜி என் காதோட சொன்னது நினைவுக்கு வருது.. அவர் என்ன சொன்னாருன்னா..
  • கே: சரி சரி, வேற கேள்விக்குப் போகலாம். மாற்றம் எப்போதும் உங்க வாழ்க்கைல இருந்துக்கிட்டே இருக்குமா ?
  • ப: என்ன கேக்க வர்றீங்கன்னு புரியாதுனு நினைக்காதீங்க. எதுவும் மாறும். ஆனா மாறாதது ஒண்ணுதான். அந்த ஒண்ணைத்தான் தேடிக்கிட்டே இருக்கேன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டீங்ன்னு தெரியும்னாலும் நீங்க விடாம அதையே கேட்பீங்கங்கறதால மேல ஒண்ணும் சொல்லாம, அடுத்த கேள்விக்குப் போங்க..
  • கே: ரொம்ப சரி. இப்ப என்ன நேரம் ஆகுது ?
  • ப: என்னவாவது கேட்டு, நான் நேரடியா டக்குனு பதில் சொல்லிடுவேன்னு நினைக்கறீங்கன்னு புரியாம இல்லைன்னு உங்களுக்கே தெரியுங்கறது எனக்கும் தெரிஞ்சாலும், நான் இப்ப நாலு மணி ஆக மூணு மணி நேரம் இருக்குன்னு சொல்லுவேன்னு நீங்க நினைச்சீங்கன்னா அது உண்மைதான்.
  • கே: எனக்கு நேரம் சரியில்ல. நாக்குல சனி. போகட்டும். உங்க கட்சி பத்தி..
  • ப: அதான் போன வாரமே சொன்னேனே. காந்தியப் பார்க்கவிடற கட்சி நம்ம கட்சி. புரிஞ்சுதா ? நேரடியா சொல்லிட்டேன் பார்த்தீங்களான்னு கேப்பேன்னு நினைச்சீங்கன்னா அது உங்க தவறுன்னு சொல்ல மாட்டேன்.
  • கே: என்ன கண்றாவி சார் இது. உங்க பேர் என்ன ? 
  • ப: அப்பா வெச்ச பேரச் சொல்லுவேன்னு நீங்க நினைப்பீங்கன்னு தெரியுங்கறது எனக்கும் புரிஞ்சிருக்கும்னு நீங்க நினைக்கலாம். ஆனா, அப்பா வெச்ச பேரைக் காட்டிலும் ‘பேர் சொல்லும் பிள்ளை’யா வளர்ந்தவன்ங்கறதாலயும், சகலகலா வல்லவனா இருக்கேன்னு பலரும் சொன்னத மனசுல வெச்சுக்கிட்டு தசாவதார வேலைகள் செஞ்சதால, மன்மத லீலைகள் பத்தின ஆராய்ச்சி அவதானிப்புல இதுக்கு மேலயும் சொல்றதுக்கு இருக்குன்னா அதுக்கு தேவர் மகனா இருக்கணும்ங்கற கணக்கெல்லாம் இல்லைங்கறதால சிங்காரவேலனுக்கு வேண்டிக்கலாம்னு களத்தூர்ல கண்ணம்மா வாக்குல பிறந்தவங்கற முறைல..
  • கே: என்ன கேக்கறதுன்னே தெரியல கமல் சார். தலை ரொம்ப கேரா இருக்கு..
  • ப: தலைல கேர் இல்லைன்னா, ஹேர் போயிரும்.. ஹெ ஹெ இப்பிடித்தான் ஒரு முறை சீமான் கிட்ட பேசிக்கிட்டிருந்த போது..
  • கே: ஓ.. அவர்கிட்டயும் பழக்கம் இருக்கா ? 
  • ப: குழப்பம் இல்லாம இருக்கணும்னு குழப்பத்துலயே இருக்கறவங்ககிட்ட பழக்கம் வெச்சுக்கறது நம்ம வழக்கம் தானேன்னு நீங்க நினைக்கலாம்னு நான் சொன்னா நீங்க ஏத்துப்பீங்களான்னு கேட்டா, அதுக்கு ஜெயமோகன் என்ன பதில் சொல்வார்னு எதிர்பார்க்கற ஒரு சாதாரண வாசகனா நான் ஓங்கிச் சொல்றது அந்த ஒரு விஷயம் தான்.
  • கே: என்ன விஷயம் ?
  • ப: விஷமமா கேள்வி கேக்கறீங்களேன்னு நான் கேட்பேன்னு நினைச்சா நான் பொறுப்பு இல்லைன்னு நீங்க நினைக்க வாய்ப்பு உண்டுங்கறது எனக்குத் தெரியுதுங்கறத மொத்தத் தமிழ்ச் சமுதாயமும் ஏத்துக்கும்னு எனக்குத் தெரியும்ங்கறதப் பத்தி நீங்க சொல்லப் போறதில்லைன்னு எனக்குத் தோணுதுன்னு நினைக்கறேன்னு வெச்சுக்குங்களேன் பரவாயில்லை.
  • கே: வாணி, சரிகால்லாம் ஏன் விலகினாங்கன்னு இப்ப புரியுதுங்க. அத்தோட, மய்யமே ஏன் குவியத்துக்குள்ள போயிட்டுதுன்னும் இப்ப புரிஞ்சு போச்சுன்னு நினைக்கறேன்னு தோணுது… சே. வியாதி தொத்திக்கிச்சே..
  • ப: இதுக்கும் நான் பதில் சொல்லணும்னு தோணாதுன்னு எனக்குத் தோணுதுன்னு வெச்சுக்கலாம்.
  • கே: சரிங்க, அடுத்து என்ன ?
  • ப: பிக் பாஸ் தான். எலெக்‌ஷனுக்கு ஒரு வருஷம் இருக்கே. அதுவரைக்கும் கலெக்‌ஷன் வாணாமா ? எப்டி நம்ம டைமிங்.. ஹெ ஹெ.
  • கே:  அடுத்த எலெக்‌ஷன் சமயத்துல சந்திக்கலாம். கொள்கை ரீதியா பேசுவோம்.
  • ப: இல்லாதத பத்தியெல்லாம் நாம் பேசறதில்லைங்கறது உங்களுக்குத் தெரியாதான்னு நான் கேட்க மாட்டேன். 
  • கே: என்ன சார் இது ? அப்ப, கொள்கை இல்லைங்கறீங்களா ?
  • ப: ஹை, நான் எப்ப அப்டி சொன்னேன்? கொள்கை இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு இல்லியா ?
  • கே: அதானே பார்த்தேன். எங்க நேரடியா பதில் சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன். 
  • ப: பயப்படாதீங்க. எனக்கு பயம்னாலே பயம். காலை பயம், மாலை பயம், இரவு பகல் எப்போதும் பயம் .. அடடே, இத பிக் பாஸ்ல சொன்னா எடுக்கும் போல இருக்கே..
  • கே: ஐயா சார். உங்களுக்குப் புண்ணியமா போகும். பக்கத்துல பஸ் ஸ்டாண்ட எங்க இருக்குன்னு சொல்லுங்க…
  • ப: வளையோசை கல கலன்னு சொல்லிக்கிட்டே கதவைத் திறந்து. உன்னால் முடியும் தம்பீன்னு ஓடினீங்கன்னா, ஆளவந்தான் தெருவுல திரும்பி அவ்வை..
  • கே: வேண்டாம் சார். நான் ஆட்டோ பிடிச்சே போயிடறேன். மறுபடியும் துவங்கிடாதீங்க. 
  • ப: துவக்கம்ங்கறது தமுக்கம் மைதானத்துல.. சரி சரி. ஓடாதீங்க. விழுந்துடப்போறீங்க..

Leave a comment