திருமண் தயாரிக்கும் கிராமம் ஜடேரியைப் பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து பலர் அந்தக் கிராமத்திற்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அவர்களுக்கான ஆன்மீக உணவளிக்க முன்வந்துள்ளனர். இத்தனையும் தீபாவளி அன்று நடந்துள்ளது.
இதைத் தவிர வேறு ஒரு செயலும் செய்யவேண்டியுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைஷ்ணவர்கள் திருமண் தரித்தே வந்துள்ளனர். இதில் பிராம்மணர்களும் அடக்கம். பல வைஷ்ணவ குலங்கள் – வன்னியர், தேவர், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கவுண்டர், நாயக்கர் முதலானோரும் அவ்வாறே நித்யப்படி திருமண் காப்பு தரித்து, தங்கள் குடும்பத்தில் வழக்கத்தில் உள்ள அனுஷ்டானங்களையும் விடாது பின்பற்றியே வந்துள்ளனர்.
திராவிட இயக்கங்கள் என்னும் நச்சு நுழைந்தபின், திரைப்பட நடிகர்கள் நாட்டின் நாயகர்களாக ஆன பின், ஆங்கில அரசின் சூழ்ச்சிக் கல்வியால் மூளை மழுங்கடிக்கப்பட்டவர்கள் அதிகார வர்க்கங்களில் அதிகரித்த பின் திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் குறைந்துவிட்டது. திருமண் இட்டுக் கொள்வது ஏதோ பத்தாம் பசலித்தனம் என்னும் எண்ணம் ஏற்பட்டு அவ்வழக்கம் அடியோடு வழக்கொழிந்துவிட்டது.
தற்காலத்தில் கோவில் அர்ச்சகர்கள், உபாத்யாயம் பண்ணி வைப்பவர்கள் தவிர அனேகம் பேர் திருமண் இட்டுக் கொள்வது இல்லை. ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்க்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு, தற்போது அதுவும் குறைந்து வருகிறது.
ஜடேரி கிராமவாசிகளுக்கு வாழ்வளிக்க வேண்டுமானால், திருமண்+ஶ்ரீசூர்ணம் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். Supply – Demand மூலமே இவர்களுக்கு நல்லது செய்ய முடியும். திருமண் இட்டுக்கொள்வது ஒரு ஆன்மீகச் சின்னம் தரித்தல் என்பது போக, அவ்வழக்கம் ஒரு Fashion Statement என்கிற அளவில் பவனி வர வேண்டும். இதற்கு வாரம் ஒரு நாளெனும் திருமண் தரித்துச் செல்வது என்று மக்கள் முன்வர வேண்டும்.
சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அடுத்த ஓராண்டுக்கு ஒருவருகொருவர் பரிசளிக்கும் போது, ஒரு திருமண் பெட்டியைப் பரிசளித்தால் என்ன? திருமண் பெட்டியுடன் #MeToo, #IamwithDharma, #Thiruman என்று ஹாஷ் டேகுகளில் சமூக ஊடகங்களில் படங்கள் வெளியிட்டால் என்ன? திருமண் இட்டுக் கொண்ட சுயப் படங்களை வெளியிட்டால் என்ன? கிழிந்த ஜீன்ஸ் அணிவது Fashion என்று உள்ளது. திருமண் இட்டுக்கொளது Fashion என்று ஆனால் ஜடேரி முதலிய கிராமங்கள், அங்கு வாழும் மக்கள் எல்லாருக்கும் நன்மை ஏற்படும். திருமண் தொழிலும் செழிக்கும்.
இம்முயற்சியால் மூன்று பிரிவினருக்கு நன்மைகள் உண்டாகும்.
- ஜடேரி மக்கள்
- திருமண் பெட்டி என்று மரப் பெட்டிகள் தயாரிப்போர்
- திருமண் வைத்துக் கொள்ளும் ஓலைப்பெட்டி தயாரிப்போர்
ஒரு ஐபோன் சுமார் 70 ஆயிரத்துக்கு விற்கிறது. ஒரு பட்டுப் புடவை சில ஆயிரங்கள். கார், பைக் முதலியன லட்சங்களில். மரத்தாலான திருமண் பெட்டி சுமார் ரூ 250 ஆகிறது. ஓலைப்பெட்டி இன்னமும் குறைவே.
இனியொரு விதி செய்வோம். இந்த ஆண்டு முழுவதும் திருமண் + ஶ்ரீசூர்ணம் உள்ள திருமண் பெட்டிகளை வாங்கிப் பரிசளிப்போம். திருமண் இட்டுக்கொள்வோம். திருமண் இட்டுக் கொள்வதைக் காப்பு என்பர் பெரியோர். எதிலிருந்து காக்கிறதோ இல்லையோ, அதைத் தரித்திருந்தால் தீய செயல்களில் நாம் ஈடுபடாமல் காக்கும் என்பது உறுதி.
அலுவலகங்களில் Ethnic Wear என்று சில நாட்களில் உடை உடுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது. அன்னாட்களில் அவ்வுடைகளுடன் திருமண்ணும் தரித்துச் செல்லலாம். உடை மட்டும் Ethnic என்றில்லாமல், நமது நெற்றியும் அவ்வறே இருக்கச் செய்யலாம்.
இது ஆண்களுக்கு மட்டுமானது அன்று. பெண்களும் நல்ல நாட்களில் கோதைத் திலகம் என்று சிறிய அளவில் இட்டுக் கொள்வது வழக்கத்தில் இருந்தது. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களும் கூட இதை ஒரு Fashion Attire என்பதாகவாவது பின்பற்றலாம். இதன்மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இதன் பயன்பாடு அதிகரிக்கும். முயற்சி செய்து பார்ப்போமே.
ஶ்ரீரங்கத்தில் இருந்து திரு.வீரராகவன் சம்பத் என்பார் மலிவான விலையில் திருமண் பெட்டிகளை அனுப்பி வைக்கிறார். இதற்கு அவர் ஜடேரி கிராமத்தில் இருந்து திருமண் கட்டிகளை வாங்கி, ஶ்ரீரங்கத்தில் ஶ்ரீசூர்ணம் தயாரித்து, பெட்டிகளில் வைத்து வேண்டுபவர்களுக்கு அனுப்புகிறார். ஜடேரி கிராமத்தில் தயாராகும் திருமண்ணின் தரத்தை அயோத்தியில் தயாராகும் திருமண்ணின் தரத்திற்கு உயரத்த முயன்றுவருகிறார். அன்னாரின் முயற்சிக்குத் தோள் கொடுப்போம். இவரைத் தொடர்புகொள்ள +91 9655219245 Email: do@pracharam.in
Will buy better to circulate this post in Wp also.
LikeLike